Friday, August 25, 2017

"சாலையோரத்தில் வேலையற்றதுகள்" என்பது இதுதான்.

ஒரு சிலர் கிளம்பியிருக்கின்றான், தமிழர் வரிபணத்தில் நடக்கும் தமிழக மருத்துவ கல்லூரியில் வடமாநிலத்துக்காரன் படிப்பதா என கடும் ஆர்ப்பாட்டம்.


பல்கலைகழக மானிய நிதி எல்லாம் தமிழக கல்லூரிகளுக்கு வருவதே இல்லையா?


அப்படியானால் தமிழர்கள் வட இந்திய நிறுவணங்களில் படிக்கவிலையா, வேலை செய்யவில்லையா?




வடக்கே ஐஏஸ் முதல் பொறியில் வரை, டெல்லி பல்கலைகழகம் வரை எத்தனை தமிழர்கள் படித்து கொண்டிருக்கின்றார்கள். அம்மாநில மக்கள் எல்லாம் இப்படி கிளம்பினால் என்னாகும்?


வட இந்தியாவில் தமிழர்களே வாழவில்லையா? மும்பை டெல்லி எல்லாம் தமிழர்களே இல்லையா?


ஏதோ தமிழன் தமிழகத்தில் மட்டும் இருப்பது போலவும், மற்ற எல்லா மாநிலத்துகாரனும் அடித்துபிடித்து இங்கு வருவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்.


இந்தியா முழுக்க வாழும் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இவர்கள் உளறிகொண்டிருக்கின்றார்கள்..


இவை எல்லாம் அப்பட்டமான உளறல்கள், குதர்க்க பேச்சுக்கள், கோணலான கொடூர புத்திகள்.


இவ்வளவும் பேசிவிட்டு வடநாட்டு பாசுமதி அரிசி பிரியாணியும், பஞ்சாப் கோதுமையில் செய்யும் பரோட்டாவைனையும் நன்றாக விழுங்கிவிட்டு தூங்க போகின்றவே இந்த உளறல்காரர்கள்.


"சாலையோரத்தில் வேலையற்றதுகள்" என்பது இதுதான்.



No comments:

Post a Comment