Wednesday, April 26, 2017

நிலக்கரி ஊழல் வழக்கினை பதிந்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்குபதிவு

நிலக்கரி ஊழல் வழக்கினை பதிந்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்குபதிவு


ஆக சிபிஐ அதிகாரிகள் மீதே பெரும் குற்றசாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடுத்த வழக்கு எப்படி உண்மையாயிருக்கும் என கேள்விகள் எழ தொடங்கியாயிற்று..


இன்று வரை நீதிபதி ஷைனி கேட்டுகொண்டிருக்கும் ஆதாரத்தை இந்நநொடி வரை சிபிஐயினால் கொடுக்கமுடியவில்லை




அடிப்படை ஆதாரம் இல்லாமலா வழக்கு தொடுத்தீர்கள் என நேரடியாகவே சீறியவர் நீதிபதி ஷைனி, அவர் குமாரசாமி ரகமல்ல, குன்ஹா ரகம், மிக நேர்மையாளர்


அன்றே இந்த ரஞ்சித் சின்ஹா மீது பல புகார்கள் குவிந்துகொண்டே இருந்தன, இன்று பல சிக்கல்களில் அவரையே தூக்கியிருக்கின்றார்கள்


ராசாவின் வாதமும் நீதிமன்றத்தில் நேற்று முடிந்தது


சூழ்நிலைகளை கவனிக்கும்பொழுது ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடிப்படை வலுவாக இல்லை, பத்திரிகைகள் எழுப்பிய பிம்பமே அப்படி இருந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் புரிகின்றது


காங்கிரஸ் ஆட்சியில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரவேண்டிய இடத்தில் 50 ஆயிரம் கோடி வந்ததுதான் சிக்கல் என்றார்கள், இப்பொழுது பாஜக் ஆட்சியில் அடுத்த 4ம் தலைமுறை ஏலத்தில் 4லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் 60 ஆயிரம் கோடி கூட வரவில்லை என்கின்றார்கள்


பாஜக ஊழல் செய்ததா என்றால் நாங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள், நிலமை இதுதான் போலிருக்கின்றது என நமுட்டு சிரிப்போடு நிறுத்திகொள்கின்றார்கள்..


ஆக உண்மை வெளிவர வெளிவர எல்லா இடமும் அமைதி நிலவுகின்றது


விரைவில் எந்த செய்தியும் வரலாம்


அன்று கலைஞர் வானில் ஊழல் செய்தார், எண்ண முடியாத ஊழல் செய்தார் என சொன்ன, 1 லட்சத்திற்கு எத்தனை சைபர் என சொல்ல தெரியாதவன் எல்லாம், ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என கூட தெரியாதவன் எல்லாம் முகத்தை எங்கு வைப்பான் என தெரியவில்லை



No comments:

Post a Comment