Wednesday, April 19, 2017

கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன் : டி.டி.வி.தினகரன்






கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன் : டி.டி.வி.தினகரன்

"இன்று போய் நாளை வா.." எனும் வசனத்தை கேட்டிருக்கின்றோம், "நேற்று போய் இன்று வந்தேன்" எனும் அரசியல் வசனத்தை இப்பொழுதுதான் கேட்கின்றோம்

அன்னார் நேற்று ஒதுங்கியதாக இன்று கூட்டத்தை ரத்து செய்துவிட்டு சொல்லிகொண்டிருக்கின்றார்


அன்னாருக்கு ஞானம் வந்துவிட்டது...

"ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
சூழ்ந்ததோர் சுற்றம் என்ன?
கையினை விட்டு ஆட்சி போனால்
கூடவே வருவதென்ன?"

-----என்பதுபோல் பேசிகொண்டிருக்கின்றார்

நாஞ்சில் சம்பத், வளர்மதி போன்றவர்கள் கூட வரமாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது

அவர் இனி அம்மா சமாதி செல்லமாட்டார், ஞானம் வந்துவிட்டதால் சென்னை பட்டினத்தார் சமாதிக்கு செல்லும் வாய்ப்பு இருக்கின்றது

" கடைகாதறுந்த ஊசியும், கை இழந்த ஆட்சியும் வாராது காண் கடை வழிக்கே" என்பது இன்று அவருக்கு புரிந்துவிட்ட தத்துவம்









நித்தியானந்தா முட்டை பிரியானி சாப்பிடும் காட்சி அம்பலமானது

யார் இந்த செய்தியினை சொன்னது?

அவர் முழுக்கோழி தின்ற காட்சியே உலகெல்லாம் தெரிந்தது, இதில் முட்டை தின்றுவிட்டாராம், கண்டுபிடித்துவிட்டார்களாம்..




 




No comments:

Post a Comment