தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது, பெரும் ஆளுமை என யாரும் இல்லை, ஓங்கி அடித்தால் சிம்மாசனத்தை தூக்கிவிடலாம்
ஆனால் ஓங்கி அடிக்கத்தான் ஆளில்லை
காமராஜர் எனும் பெரும் மலையினை சாய்த்து ஆட்சி பிடித்தார் கலைஞர், இங்கோ பூப்பாதையிலும் நடக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை
நியாயம், நீதி, நேர்மை என சொல்லிகொண்டிருக்கின்றார் என்கின்றார்கள், 1960ல் இப்படி கலைஞரும் சொல்லிகொண்டிருந்தார் என்றால் இன்று நல்லகண்ணு போலவோ அல்லது டிராபிக் ராமசாமி போலவோதான் கருணாநிதி இருந்திருப்பார், இப்படி அரசியல் சாணக்கியனாக ஜொலித்திருக்கமாட்டார்
இது அரசியல், பூனை எந்த நிறமாக இருந்தால் என்ன? எலியினை பிடித்தால் போதும் என்ற கொள்கைதான் இங்கு சாத்தியாகுமே தவிர, வேறு எதுவும் சரிவராது, கலைஞர் அதனைத்தான் செய்தார்
ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் , அவரது அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒவ்வொரு பொன்னான நொடியினையும் தவற விட்டு கொண்டிருக்கின்றார் என்றே தோன்றுகின்றது
கொசுறு
போர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா
இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லைபோர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா
இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லை, அடிபட்டு சாகட்டும், அடிபட்டு சாகட்டும்
இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லைபோர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா
இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லை, அடிபட்டு சாகட்டும், அடிபட்டு சாகட்டும்
No comments:
Post a Comment