ஏற்கனவே ஏழை தமிழரை காத்துவிட்டு, அதன் பின் தமிழை காத்து வளர்த்துவிட்டு, பின் ஈழதமிழரை வாழவைத்துவிட்ட தமிழக கட்சிகள் இப்பொழுது விவசாயிகளை காக்க கிளம்பிவிட்டன
எல்லா நாட்டிலும் உணவு போடுபவன் விவசாயி என்றால், இம்மாநிலத்தில் வோட்டு போடுபவன் என்ற நோக்கில் மட்டும் பார்க்கின்றார்கள்
இவை எல்லாம் வெற்று ஆர்பாட்டம், வறட்டு கூச்சலே அன்றி விவசாயிகளுக்கான விடிவு அல்ல, அல்லவே அல்ல
வாய்ப்பு கிடைக்கும் பொழுது சாராய அதிபர்களையும், கல்வி தந்தைகளையும் வளர்க்க வேண்டியது, ஆட்சி போனபின்பு விவசாயிகளுக்காக அழவேண்டியது
இப்படியாக ஒரு அரசியல்..
இதற்கு பதிலாக "மாநில அரசே பதவி விலகு.." என உண்மை நோக்கத்தை சொல்லிவிடலாம், அது நல்லது..
திமுக ஆட்சி 100% போற்றகூடிய ஆட்சி அல்ல, ஆனால் இந்த அதிமுகவுடன் ஒப்பிடும்பொழுது 10 மடங்கு நல்ல ஆட்சி, அதுவும் இப்போதிருக்கும் ஆட்சியுடன் ஒப்பிட்டால் 1000 மடங்கு பரவாயில்லை
No comments:
Post a Comment