தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: ஓ.பி.எஸ்
எது? பேச்சு என்றவுடன் மன்னார்குடி குடும்பம் ஒதுங்கினால் போதும் என ஒப்புகொள்வதா? இதுவா வெற்றி
மிஸ்டர் பன்னீர், நீங்கள் சொன்ன தர்மயுத்தம் எது? ஜெயாவின் சாவு விசாரிக்கபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்பது. அந்த தர்மயுத்ததில் நீங்கள் ஈடுபட்டுள்ளதாகத்தான் தமிழகம் நம்புகின்றது
ஆனால் நீங்களோ அந்த நிபந்தனையினை மறந்து, உங்கள் தர்மயுத்தத்தை இரட்டை இலையினை மீட்டு, கட்சிக்குள் ஆதிக்கம் பெறுவதாக மாற்றி கொண்டீர்கள்
நீங்கள் அரசியல்வாதி அல்லவா? மறந்துவிடுவது உங்கள் பழக்கம்
ஆனால் மக்கள் மறக்கவில்லை
நாளையே இரட்டை இலையினை மீட்டு, வெற்றி வெற்றி மன்னார்குடி குடும்பம் விரட்டபட்டது என ஜெயா சாவு மர்மத்தை தூங்கவிட்டுவிட்டு மக்களிடம் வந்தால்..
"தர்ம யுத்தம் வென்றது" என மக்களிடம் வந்தால்..
"தர்ம அடி" என்பது என்ன என்பது உங்களுக்கு அப்போது புரியும்
No comments:
Post a Comment