மின் உற்பத்தி பாதிப்பு, தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி
இப்பொழுதிருக்கும் அமைச்சர்கள் வித்தியாசமானவர்கள் அல்லவா? வீடு வீடாக பேட்டரி வழங்குதல் போன்ற திட்டங்களில் இறங்கலாம்.
அதற்கும் மேலாக மின் உற்பத்தி டர்பன்களை கையால் சுழற்றும் திட்டமும் இருக்கலாம்
சென்னையில் எந்த மின்வெட்டானும் ராமசந்திரன் சமாதி ஏரியா மட்டும் இருளில் மூழ்காது, ஏனென்றால் அவரும், ஜெயாவும் விழித்திருந்து அண்ணாயிச கொள்கைகளை படிக்கின்றார்கள் அல்லவா?
கல்லறைகளுக்கு இருக்கும் மின்வசதி அங்கு மக்களுக்கு இல்லை.
கூடன்குளம், கல்பாக்கம் என பல ஆயிரம் மெகாவாட் உற்பத்தி என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், ஆனால் எங்கு செல்கின்றதோ தெரியவில்லை
எதற்கும் இந்த அமைச்சர்களிடம் மின்சாரம் ஆவியாகின்றது தடுங்கள் என சொல்லி வைத்தால் நல்லது
அப்படியா? இதோ பார்க்கின்றோம் என யோசிக்காமலே தெர்மாக்கோலோடு அணுவுலைக்குள் குதிப்பார்கள்
அப்படி குதித்தால் இன்னும் தமிழகத்திற்கு நல்லது..
No comments:
Post a Comment