Monday, April 24, 2017

தீபா மீது மோசடி வழக்கு பதிவு , இன்னும் பிற ....

கொடநாட்டு பங்களா காவலாளி அடித்து கொலை, ஆவணங்கள் திருட்டு என தகவல்

என்னது காவலாளியினையுமா?......



சூறாவளி என்பது சுழன்றடிக்க வேண்டும், அமைதியான சூறாவளியினை யாரும் சீண்டுவதில்லை, அப்படி ஒன்று சாத்தியமுமில்லை


எல்லாம் அதனதன் இயல்பில் இருத்தல் அழகு


அப்படி மிக பொறுப்பாக ஆடும் அமைதியான கிறிஸ் கெயிலை ரசிக்க முடியவில்லை.. 






தீபா மீது மோசடி வழக்கு பதிவு : செய்தி


"அத்தை வழி இந்த வழி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அந்தசிறை சேரம்மா.."




ஜெயா வழியில் செல்வேன் என அன்றே தீபா சொல்லிய அர்த்தம் இதுதான் போலிருக்கின்றது..







அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்ஒரு மிக மோசமான மன நோயாளி, அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் : அமெரிக்க உளவியல் நிபுணர் ஜோன் கார்ணர்.

இந்த செய்தியினை கேட்ட புட்டீன், வடகொரிய அதிபர்கள் எல்லாம் எப்படி எடுத்திருப்பார்கள்?

அமெரிக்காவில் மட்டுமா மனநோயாளிகள் ஆள்கின்றார்கள்?, இந்த ஜோன் கார்னரை பல நாடுகளின் ஆராய்ச்சிக்கு அழைக்கவேண்டியிருக்கின்றது




 

No comments:

Post a Comment