Thursday, April 27, 2017

தமிழக அரசு மின்சாரம் வாங்கியதற்காக செலுத்தவேண்டிய தொகை பாக்கி....

திருவள்ளுர் மாவட்டம், வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு தமிழக அரசு செலுத்தவேண்டிய தொகை பாக்கி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்தவேண்டி உள்ளதால், வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின்சாரத்தை நிறுத்தியதாகவும் ஒரு செய்தி


ஜெயா சொத்துமதிப்பு எத்தனாயிரம் கோடி?, கணக்கில் வராத சொத்துக்கள் எத்தனை ஆயிரம் கோடி?, கூவத்தூரில் செலவழிக்கபட்டது எத்தனை ஆயிரம் கோடி......


அதிமுக அமைச்சர்கள் வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான நூறு கோடிகள் கைபற்றபட்டது, ஆர்கே நகரில் அதிமுக பல ஆயிரம் கோடிகளை இறக்கியதால் தேர்தல் நிறுத்திவைப்பு,




சிறையில் ஏசி வைக்க சசிகலா பல கோடி பேரம் பேசினார், இரட்டை இலையினை மீட்க பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது...


இப்படியும் சில செய்திகள்


இரண்டும் தமிழக செய்திகள் என்பது குறிப்பிடதக்கது, இதுதான் தமிழகம்


இந்த செய்திகளை எல்லாம் கேட்டபின்னும் சோறு தின்றுவிட்டு காற்று வீசிகொண்டிருக்கின்றான் அல்லவா?


அவன் தான் தமிழன்..



No comments:

Post a Comment