Friday, April 21, 2017

தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது....





அக்காலத்தில் தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது, பந்து அங்கு திண்ணையில் இருக்கும் கிழவிகள் தலையினையோ அல்லது வீட்டு ஓட்டையோ தாக்கும்


உடனே அந்த கிழவிகள் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு அடிக்க ஓடிவருவார்கள், அது கம்போ, உலக்கையோ அல்லது ஆட்டுக்கு வைத்திருக்கும் இலை குழைகளோ எதுவோ ஒன்று


அதனை கையில் வைத்து கொண்டு தை தை என‌ ஆடுவார்கள்





இந்த ஐபிஎல்லின் சியர்ஸ் கேர்ல்ஸ் ஆட்டத்தை பார்க்கும் பொழுது அந்த கிழவிகளின் ஆக்ரோஷ ஆட்டம்தான் நினைவுக்கு வருகின்றது

அவர்களை வெறுப்பேற்ற திரும்ப திரும்ப அங்கேயே ஆடுவதுண்டு, ஆக அவர்கள்தான் தெருமுனை ஆட்டத்தை உற்சாகபடுத்தியிருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் நமக்கெல்லாம் நன்றாக புரிகின்றது..

ஆக அக்காலத்திலே கிராமங்களில் சியர்ஸ் கிழவிகள் இருந்திருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது, அவர்கள்தான் இந்த சியர்ஸ் ஆட்டங்களுக்கு முன்னோடிகள்

இப்பொழுது எல்லா ஐபில் ஆட்டத்திலும் அந்த சியர்ஸ் கேர்ள்ஸ் ஆடிகொண்டிருக்கின்றார்கள்

சில ஐபிஎல் ஆட்டத்தில் கிரிகெட் வீரர்களை விட சியர்ஸ் கேள்ஸ் நன்றாக ஆடுகின்றார்கள்..

அவர்களுக்கும்" வுமன் ஆப்த மேட்ச்", "வுமன் ஆப் த சீரியல்" எல்லாம் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்..




 

 



 

No comments:

Post a Comment