9 மணிநேர விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் கைது
நமது தமிழக காவல் நிலையத்தில்தான் "சும்மா" விசாரணை என அழைத்துசென்று பின் பட்டாபட்டி டவுசரோடு அமர வைப்பார்கள் என்றால், டில்லி போலிசும் அப்படித்தான் போலிருக்கின்றது
ஏதோ ஒரு படத்தில் வடிவேலு சொல்வது போல "நம்பி போனேன்" அங்க 4 பேர் மொத்துனாங்க, அப்புறம் மீன்பாடி வண்டில போட்டு அனுப்புனாங்க, அப்புறம் இன்னொருத்தனிடம் அனுப்புனாங்க" எனும் வகையில் வறுத்திருக்கின்றார்கள்
ஏதோ கடும் கோபத்தில் டெல்லி களமிரங்கியிருப்பது தெரிகின்றது, மன்னார்குடி குடும்பத்த்தை ஓட அடிப்பது என எங்கோ முடிவெடுத்திருக்கின்றார்கள்
"இனி உங்கள் குடும்பத்திலிருந்து ஏன் ஊரிலிருந்து கூட எவனாவது அரசியலுக்கு வந்தீர்கள் என்றால் தொலைத்தே விடுவோம், வருவீர்களா? வருவீர்களா?.." என போட்டு அடிப்பது தெரிகின்றது..
முற்பகல் விதைத்தால், பிற்பகல் விளையும், விதைத்ததை அறுக்கின்றார்கள்...
ஆனால் ஒரு விஷயம் ஒப்புகொள்ளவேண்டும், வல்லவனுக்கு மேல் வல்லவன் வையகத்தில் உண்டு, ஒருவனின் அட்டகாசம் எல்லை மீறி செல்லும்பொழுது அதனை அடக்க இன்னொருவன் வந்தே தீருவான் என்பது இயற்கை விதி
இப்படி தர்மத்தின் சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்..
அப்படித்தான் இன்று தமிழகத்திற்கு டெல்லி ஏதோ செய்கின்றது, டெல்லியின் இந்த அதிரடி கோலமும் இல்லையென்றால் தமிழகத்தில் மன்னார்குடி குடும்பத்தை எதிர்க்கபோவது யார்? ஒருவரும் இல்லை
தெய்வம் நின்று கேட்கும், அது டெல்லியிலிருந்து வந்தும் அடிக்கும்.., டெல்லிக்கு அழைத்து வைத்தும் அடிக்கும்.
No comments:
Post a Comment