Friday, April 28, 2017

எல்லா வஞ்சகர்களையும், முடிச்சவிக்கிகளையும் ஒன்றாய் வைக்கவே கூடாது

பெரும் பலசாலிகள் எல்லோரும் ஒரு சேரே இடத்தில் இருந்தால் அங்கு தோல்விதான் என்பதை முதலில் சொன்னது மகாபாரதம், கவுரவர் அணி அப்படித்தான் பலத்தோடு இருந்தது, பின் நாசமானது


காரணம் எல்லோரும் பெரும் வீரர்கள், ஈகோ முதல் "நான் யார் தெரியுமா?", ""என் ஒருவனுக்கு பதில் சொல்ல முடியுமா?" , "உன்னுடன் நானா? என் தகுதிக்கு தகுமா?" என்பது வரை ஏகபட்ட சிக்கல்கள் இருந்தன, கவுரவர் அணி தோற்றது


அப்படி இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐபில் அணியும் பெரும் பலசாலிகள் நிறைய இருப்பதால் தோல்விமுகத்தில் இருக்கின்றது.




எல்லா பராக்கிரமசாலிகளையும் ஒரே இடத்தில் வைக்க கூடாது என்பதற்கு மகாபாரத கவுரவர் அணி போலவே இன்று பெங்களூர் அணி எடுத்துகாட்டு


அப்படியே எல்லா வஞ்சகர்களையும், முடிச்சவிக்கிகளையும் ஒன்றாய் வைக்கவே கூடாது என்பதற்கு அதிமுக கட்சி உதாரணம்..






No comments:

Post a Comment