Tuesday, April 18, 2017

பன்னீர், தினகரன் அணிகள் இணைய அமைச்சர்கள் ஆலோசனை


18033903_10208958481014373_9060848598321360740_n.jpg


பன்னீர், தினகரன் அணிகள் இணைய அமைச்சர்கள் ஆலோசனை


பாஷா படத்தின் காட்சி நினைவுக்கு வருகின்றது


"இங்க பாரு பாஷா, நமக்குள்ள சண்டண்ணா போலிஸ்க்குதான் லாபம், ஆண்டனி, பாஷாண்ணு இரண்டு பேர் இனி எதிரிகள் கிடையாது, ஒரே குரூப்தான், உன் பிசினஸ்ல நானும்,என் பிசினஸ்ல நீயும் தலையிட கூடாது"




அப்படியாக இப்பொழுது காட்சிகள் நடக்கின்றன‌, ஆலோசனை இப்படி நடக்கலாம்


"மிஸ்டர் ஒபிஎஸ் நமக்குள்ள சண்டைன்னா திமுகவிற்குத்தான் லாபம், இனி நாம நண்பர்கள், உங்க பிசினஸ்ல நாங்க தலையிடமாட்டோம், எங்க பிசினஸ்ல நீங்க தலையிட கூடாது"


பன்னீர் என்ன சொல்வாரோ? இப்படி சொல்லலாம்


"இங்க பாருங்க எடப்பாடி, எனக்கும் தினகரனுக்கும்தான் சண்ட, ஒண்ணு உங்க ஆள் சம்பாதிக்கணும், இல்ல எங்க ஆளு சம்பாதிக்கணும்,


நான் சம்பாதிக்கணும் இல்ல நீங்க சம்பாதிக்கணும்


மன்னார் குடி குடும்பத்துக்கு சல்லி காசு கிடையாது...


நம்மையெல்லாம் டெல்லி சோதிப்பார் ஆனா கைவிடமாட்டார், தினகரன் கோஷ்டிய ஏற்கனவே கைவிட்டுட்டார்"


பன்னீர் இப்படி பாஷாவாக சீறினால் நன்றாகத்தான் இருக்கும்,


அவரோ ரங்கசாமி விஜயகுமார் போல "நான் அம்மா உப்ப தின்னுருக்கேன், அம்மா விசுவாசத்தை விடமாட்டேன்" என காலில் விழும் வாய்ப்பும் உண்டு


பன்னீர் பாஷாவா? ரங்கசாமியா? என்பது விரைவில் தெரியும்


ஒருவேளை பன்னீர் ரங்கசாமியாகிவிட்டால், அதே தான் பின்னொருநாளில் கம்பத்தில் கட்டி வைத்து அடிதான்..


அது இருக்கட்டும்


அது என்ன இவர்கள் இருவரும் இணைவது? இவர்கள் இணைந்தால் மட்டும் சின்ன புரட்சி தலைவி தீபா வந்துவிடுவாரா?


இல்லை அவரின் கணவர் புது புரட்சிதலைவனும் வந்து இணைந்துவிடுவாரா? நடக்குமா?


ஆக பன்னீரும் எடப்பாடியும் மொத்தமாக தீபா கோஷ்டியில் இணைவது அவர்களுக்கு நல்லது..







18011136_10208958029523086_3263519953323827162_n.jpg


"இணைந்து செயல்படுவோம்... இரட்டை இலையை மீட்போம்" பன்னீர் கோஷ்டிக்கு அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு


இவர் ரொம்ப லேட் " எல்லோரும் ஒரு கை பிடிங்க, இலை எடுப்போம்" என என்றோ மகான் ராமராஜன் சொல்லிவிட்டார்..


ராமராஜன் நிச்சயமாக ஒரு பெரும் தீர்க்கதரிசி..








No comments:

Post a Comment