அய்யாகண்ணுவினை சந்தித்தார் பொன்.ராதா கிருஷ்ணன்
மோடியினை பார்த்தே தீருவோம் என அடம்பிடித்து, அம்மணம் பிடித்த அய்யாகண்ணு , குறைந்த பட்சம் வேளான் துறை அமைச்சரிடம் கூட உத்திரவாதம் வாங்காமல் ராதாகிருஷ்ணனிடம் சரண் அடைந்துவிட்டாரா?
கவனித்தால் ஒன்று புரிகின்றதா?
தமிழகத்தில் எரியும் கொள்ளி அணைந்தால், டெல்லியில் அய்யாகண்ணு கொதிப்பது தணிகின்றது
மிஸ்டர் ராதா கிருஷ்ணனை தமிழகத்தில் பார்க்கமுடியாதா? டெல்லிக்கு சென்று அம்மணமாய் ஆர்ப்பாட்டம் செய்துதான் பார்க்கமுடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் கேட்க கூடாது
ஆனாலும் மிஸ்டர் அய்யாகண்ணு, இனி உங்கள் போராட்டத்தை அமெரிக்காவில் நடத்துங்கள், தமிழகத்தில் பிடிக்கமுடியாத பொன்னாரை டெல்லியில் பிடித்தது போல, டெல்லியில் பிடிக்க முடியாத மோடியினை அமெரிக்காவில் நிச்சயம் சந்தித்துவிடலாம்
No comments:
Post a Comment