கடாபி 2009ல் மிக கடுமையான யுத்தத்தில் செத்துவிட்டதாக அறிவித்து வீரவணக்கம் செலுத்தினர் புலிகள், ஆனால் அதே கடாபிதான் கடந்தவாரம் கொழும்பில் கைது செய்யபட்டிருக்கின்றார், எப்படி? கொஞ்சம் ஆழநோக்கினால் தலை சுற்றுகின்றது.
அதாவது 2009ல் கடைசிமுயற்சியாக ஆனந்தபுரம் எனும் இடத்தில் மோதியபுலிகளுக்கு ஒன்றும் வெற்றியில்லை, அவ்வளவுதான் இவர்கள் கடாபி உட்பட எல்லோரும் பலியானார்கள் என பிரபாகரன், பொட்டு அம்மான் இல்லாத பெரிய பட்டியலை வாசித்துவிட்டு சிங்களனிடம் சரணடைய கிளம்பிவிட்டார்கள்,
சரணடைய வருவோர் என புலிகள் அனுப்பிய பட்டியலை ஐ.நாவே வெளியிட்டிருக்கின்றது
அப்படி சயனைடு கடிக்காமல், தற்கொலை வெடிக்காமல் கிளம்பி சென்றிருக்கின்றார்கள், மேல்மட்ட புலிகள் எல்லாம் அப்படி சரணடைந்திருக்கின்றன, இதில் குறிப்பிட்டவர்களை செய்ய வேண்டியதை செய்துவிட்டு மற்றவர்களுக்கு புணர்வாழ்வு அளித்து விடுதலை செய்திருக்கின்றது சிங்களம்.
புலிகள் இயக்கத்தவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பெயர் வைக்கபடும், அப்படி ஆதவன் என்ற அய்யாதுரை மோகன் தாஸ் என இயற்பெயர் கொண்ட கடாபியும் கைது செய்யபட்டு விடுவிக்கபட்டிருக்கின்றார், காரணம் இவர் புலிகளில் அவ்வளவு பிரபலமில்லை, புலிகள் அழிந்ததால் ராணுவமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை
இந்த கடாபிதான் குறி தவறாமல் "டப் டப்" என்று சுட்டவர், கைதுப்பாக்கியால் விமானத்தை சுட்டவர், என்னை பாராட்டி தழுவியவர் என அங்கிள் சைமனால் தமிழகம் எங்கும் சொல்லபட்டவர். பெரும் வீரர், துப்பாக்கி இவரை கண்டால் தானாக சுட்டுகொள்ளும் என்றெல்லாம் கதை கட்டபட்டவர்.
அவர்தான் கொழும்பு விமான நிலையத்தில் இந்தியாவிற்கு தப்பும்பொழுது பிடிபட்டிருக்கின்றார், இவர் இந்தியா சென்றால் யாருக்கு நஷ்டம் என தெரியவில்லை, பிடித்துகொடுத்துவிட்டார்கள். இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அன்னார் பிடிபட்ட விஷயம் புலி அபிமானிகளிடம் பெரும் அதிர்ச்சி உண்டாக்கி இருக்கின்றது
இந்த உயிரோடு உள்ள கடாபிக்குத்தான் கடந்த 6 வருடமாக மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றது சீமான் கோஷ்டி. ஹிஹீஹிஹ்
அவ்வளவுதான் ஆரம்பித்துவிட்டார்கள், இவந்தான் தலைவரை காட்டி கொடுத்திருப்பான்,துரோகி, ஈனபிறவி என்றெல்லாம் அர்ச்சனை தொடங்கிவிட்டது, அதாவது இவர் பிரபாகரனோடு சரணடைய சென்றவர் என்பதால், எப்படியும் பிரபாகரனின் இமேஜுக்கு கடும் அடி விழும்.
மொத்தத்தில் அப்பாவி புலிகள் சாக பெரும் மட்டபுலிகள் ராணுவத்திடம் சரண்டைந்திருக்கின்றன, அவன் மண்டையிலே போட்டு கொன்றிருக்கின்றான், சில தப்பி இருக்கின்றன அதிலொன்று ஆதவன் என்ற இந்த கடாபி. இதுதான் புலிகளின் மண்டியிடாத மானம், விழுந்துவிடாத வீரம். புலிகளின் இந்த ஏமாற்றுவேலை பற்றி உலகமே காரி துப்புகின்றது. மற்றவர்கள் என்றால் சாக வேண்டும், மூத்த புலி எல்லாம் வாழவேண்டும். இது புலிகொள்கை, கேட்டால் போராட்டம் என்பார்கள்.
எப்படி சிங்களன் உயிரோடு விடுவான் என நம்பினார்கள் என தெரியவில்லை, சென்றார்கள். சிக்கினார்கள்
சரி இந்தியா வருவதற்கு இந்த ஆதவன் என்ற கடாபி ஏன் திட்டமிட்டார், இந்திய தமிழகத்தில் அவரின் வீரதீரங்களை தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் முழங்கியவர் அங்கிள் சைமன், ஒரு வேளை அவரை பார்க்க வந்திருப்பாரோ?, ஆச்சரியமாக சைமன் கடாபி பற்றி புகழ்ந்த வீடியோக்களை எல்லாம் காணாவில்லை, இனி பாருங்கள், அங்கிள் கூட கடாபியினை துரோகி என்பார்.
ஜெயலலிதாவினை அங்கிள் அவசரமாக வாழ்த்தியதில்ம் மர்மம் இருக்கலாம் :)
கடந்த உலகளாவிய போட்டியில் சரண்டைந்த சில புலிகளை (புலிகளின் செய்திகளை நம்பி) துப்பாக்கி சுடும் போட்டிக்காக சிங்களம் வெளிநாட்டிற்கு இலங்கை சார்பில் அனுப்பியது, அதன்பின்புதான் தெரிந்தது புலிகளின் பயிற்சி இவ்வளவுதானா? என்று. அதன் பின் சிங்களம் அந்த முன்னாள் போராளிகளை துப்பாக்கி துடைக்கமட்டும் பணி அமர்த்தியது ,
இந்த ஆதவன் மட்டும் அன்றே சிக்கி இருந்தால் அவரையும் எங்காவது போட்டிக்கு அனுப்பி, அவர் சொதப்புவதை சீமானுக்கு வீடியோ அனுப்பி இருப்பார்கள். எல்லாம் சும்மா அளவிற்கு மீறிய கட்டுகதைகள்.
இனி இவர் கெஞ்சினாலும் சீமான் போன்ற ஐரோப்பிய புலிகள், நாகேஷ் ஸ்டைலில் சொல்வார்கள், "நீ செத்துவிட்டதாக அஞ்சலி எல்லாம் செலுத்தி சங்கத்திலிருந்து நீக்கிவிட்டோம், இனி சேர்க்கமுடியாது , அதனால் நீ செத்து போ"
ஆக செத்த புலிகள் எல்லாம் வருகின்றன, இவர்கள் இனி "ஆவி வணக்கம்" செய்வார்கள், செய்யட்டும். ஒருவேளை பிரபாகரனோ அல்லது பொட்டுவோ சரணடைந்து சிங்கள ரகசிய சிறையில் உயிரோடு இருந்தால் இப்படித்தான் சொல்லிகொண்டிருப்பார்.
"ஒற்றே ஒரு முறை, என்னை வெளிக்கால விடுங்கோ, யுவன் சைமன்னு ஒருத்தன் தமிழ்நாட்டில திரியுரான். அவன மட்டும் மண்டையில போட்டுட்டு வந்துரவன், என்ன நம்புங்கோவன், அவனால என்னட பேரும், இயக்க பேரும் மோசமா சீரழியுது.."
No comments:
Post a Comment