Monday, May 30, 2016

பெரும் எழுச்சி நிச்சயம்வெற்றியாக முடிந்திருக்கும்

டேய் விவரமில்லா பதரே, இந்திய அரசின் கை கூலியே, இன உணர்வு இல்லாதவனே, ராஜிவ் கொலை நடந்த இடத்தில் சிங்களன் ஜெயவர்த்தனேவின் உறவினரும் இருந்தார்களாம், அது சிங்களன் தொடர்பும் உண்டு, புலிகள் நல்லவர்கள், அவர்கள் தியாகிகள்,போராளிகள் என ஒருவர் அட்டகாசம் செய்கின்றார்.

டேய் அறிவு சுடரே சிங்களன் அப்படித்தான், தான் செய்ய நினைத்ததை எல்லாம் புலிகள் மூலம் தந்திரமாக செய்தான். ஈழமக்களின் பெரும் எழுச்சி நிச்சயம்வெற்றியாக முடிந்திருக்கும்,

ஆனால் சிங்களனுக்கு மற்ற போராளிகளை ஒழிக்கும் வேலையினை மிச்சமாக்கி ஒரு பெரும் போராட்ட பின்னடைவினை புலிகள்தான் செய்து கொடுத்தனர் எல்லா குழுக்களையும் அழித்து சிங்களனுக்கு முதலில் உதவினர்.


ஈழவிவகாரங்களில் இந்தியா தலையிடுவதை சிங்களம் கடுமையான அவமானமாக கருதிற்று, அதனால்தான் ராஜிவினை அடித்து கொல்லவும் அது துணிந்தது, ராஜிவ் இருந்தால் நிச்சயம் தலையிட்டு ஈழமக்களுக்காக சிங்களனை எதிர்ப்பார் என்பது அதன் கணக்கு

கொழும்பில் பின்மண்டையில் அடித்து கொல்ல ராஜிவினை கொல்ல சிங்களம் நினைத்திருக்கலாம், அவர் தப்பினார். அதன்பின் அமைதிபடை எனும் இலங்கை ஆபத்தினை, புலிகளை வைத்தே விரட்டினான் சிங்களன், இது புலிகள் செய்த இரண்டாம் உதவி

அடுத்து இனி பதவிக்கு வந்தால் இலங்கையில் தலையிடுவாரோ ராஜிவ் என சிங்களம் அச்சப்பட்ட சமயத்தில் தான் , சிங்களன் மண்டையில் அடித்தும் தப்பிய அவரை கொன்று சிங்களனை மகிழ்ச்சியில் திளைக்கவிட்டனர் புலிகள்.

ஆக புலிகளுக்கும் சிங்களனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்த புரிதல் அப்படி. புலிகளின் எல்லா நடவடிக்கைகளும் இன்னொரு நாடு ஈழபிரச்சினையில் தலையிடுவதை தடுக்கும் வகையில்தான் இருக்கும், கூர்ந்து கவனித்தால் தெரியும், இது நிச்சயம் சிங்களனுக்கு பெரும் லாபம்.

சுருக்கமாக சொன்னால் பெரும் மக்கள் எழுச்சியினை தன்பக்கம் திருப்பி, தான் சொன்னதை எல்லாம் மக்களை செய்யவைத்து, அதனை சிங்களனுக்கு சாதகமாக்கி இன்று ஈழமக்களுக்கு பெரும் துரோகம் செய்தது புலிகள் மட்டுமே

சிங்களன் செய்யவேண்டியதை எல்லாம் செய்து, இந்தியாவிற்கும் ஈழமக்களுக்கும் பெரும் பகையினை உண்டாக்கியதும் புலிகளே, தந்திரமான சிங்களம் புலிகள் கையாலே எல்லாம் செய்துவிட்டு பின் புலிகளையும் அழித்துவிட்டது, எப்படிபட்ட தந்திரோபாயம் இது? புலிகளுக்கு கொஞ்சமேனும் அறிவிருந்தால் இப்படி சிங்கள வலையில் விழுவார்களா?

எந்தநாட்டு மக்கள் இப்படி சாவர்கள்? அவர்கள் செத்தார்கள், சாக தயாரானர்கள், உலகம் அவர்களை பரிதாபமாக பார்த்தது, ஒரு அனுதாபமும் வந்தது. ஆனால் அதனை நல்ல வழியில் வென்றெடுக்க முடியாத தலமையாக புலிகள்தான் இருந்தனர், எல்லாம் வீண் ஆனது.

என்னிடம் கேள்வி கேட்ட அந்த அறிவுசுடருக்கு விளங்கவேண்டியது அதுதான். இன்று ராஜிவ் கொலைபழி புலிகள் மீதுமட்டும்தான் உண்டு, அந்த சிங்கள தொடர்பு பற்றி சொல்லி இருக்கவேண்டியது நீங்கள் அல்ல அறிவே, பிரபாகரன், அவர்தான் சொல்லி இருக்கவேண்டும்

No comments:

Post a Comment