Wednesday, May 11, 2016

சிதரல்கள்

1 பச்சமுத்து உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பாமக ஓயாது: ஏ.கே.மூர்த்தி அறிக்கை

# ஆமாம் ஓயமாட்டார்கள், மணல் முதல் கிராணைட் வரை எத்தனை குற்றவாளிகள் தண்டிக்க பாடுபட்ட கட்சி அது, எத்தனை சாதிய கொலைகுற்றவாளிகளை பிடித்தே கொடுத்திருக்கின்றது, இந்த பச்சமுத்துவினை எல்லாம் அது விடவே விடாது.

# இன்னும் 2 நாளில் சில உடன்படிக்கைகளுக்கு பின் இன்னொரு கச்சமுத்து அல்லது மிச்சமுத்துவினை தண்டிக்க கிளம்புவார்களே ஒழிய ஓய மாட்டார்கள்.

 

2 அடேய் மங்குனிகளா?, ஜெயலலிதாவினை விடுங்கள் அனுமதி மறுத்த கமிஷனரை ஏதாவது சொன்னீர்களா? "நீ எல்லாம் தமிழனா?, தமிழின துரோகி" என சொல்லி அவர் சட்டையினை எல்லாம் பிடிக்கவேண்டாம்,

மாறாக அவரின் தழிழின, தமிழன் இன உணர்வினையாவது சோதித்து பார்க்கவேண்டாமா?, அவரை விட்டுவிட்டு முகநூலில் முகம் தெரியாதவனிடம் எல்லாம் கேள்வி கேட்கின்றீர்களா?

உங்களில் ஒருவனாவது அந்த கமிஷணரிடம் உன் சாதியினை சொல், நீ வந்தேறியா? தமிழனா என நான் சொல்கிறேன் என கேட்டீர்களா?

No comments:

Post a Comment