Monday, May 30, 2016

மே 18 லண்டனில்

ஐரோப்பிய ஈழ அமைப்புகளிடையே கடந்த 18ம் தேதி லண்டனில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது, பெரும் குழப்பமும் அவமானமும் நிறைந்த இந்த சம்பவம் புலி ஆதரவாளர்களால் திட்டமிட்டு மறைக்கபட்டுள்ளது : பரபரப்பு செய்தி

# இதெல்லாம் விஷயமா? வைகோவின் ஈழ சுருதி குறைய ஆரம்பித்து, சீமானின் தொண்டை உச்சத்திற்க்கு செல்லும் போதே எமக்கெல்லாம் விளங்கிற்று, நெடுமாறன் சீமான் உறவு முறிவும், இன்னும் பல விஷயங்களும் அப்பொழுதே சண்டையினை அறிகுறிகளாய் சொன்னது,

# அதாவது பல ஐரோப்பிய புலி ஆதரவு ஈழகுழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒருவரை தமிழகத்தில் இயக்குகின்றன, எந்தநபர் அதிகம் கத்துகின்றாரோ அவருக்கு வருமானம் அதிகம், யார் சத்தமில்லையோ அவருக்கு குழுக்கள் ஒன்றும் அனுப்பவில்லை என அறிக.


# அங்கிளின் கடும் தோல்வியினை தொடர்ந்து இனி அங்கிளை லண்டனுக்கு அழைத்து அவர்கள் போட்டு சாத்தலாம், அங்கிள் லேசுபட்டவரா? ஏதாவது பிரபாகரன் படத்தோடு போராட்டம் செய்து ஜெயிலில் சென்று பிரியாணி சமைக்க ஆரம்பித்துவிடுவார், இதனால் லண்டனுக்கு செல்ல முடியாது என காரணமும் அழகாக சொல்லிவிடுவார்.

No comments:

Post a Comment