உலகில் பலவகையான போராட்ட தத்துவம் உண்டு, அஹிம்சை, ஆயுதம், அதிதீவிரவாதம், பொதுவுடமை , மதபுரட்சி என பலவகையான போராட்டங்களை உலகம் கண்டிருக்கின்றது, இப்படி ஒரு போராட்டத்தை எங்காவது உலகம் கண்டதுணா?
நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விரைவில் திருமணம் செய்யவேண்டுமாம், ஒருவேளை கட்சி அனுதாபிக்கு திருமணம் ஆகியிருந்தால் என்ன செய்ய? அன்று கூட 65 வயது பிராமண பாட்டி சீமானை உச்சி முகர்ந்தது (பெரியாரை திட்ட யார் வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி), அந்த பாட்டி இப்படி எல்லாம் கிளம்ப முடியுமா? நாடு தாங்குமா?
இளைஞர்கள் ஒரு திருமணம் மூலம் 50 பேரை உணர்வாளராக்க முடியுமாம், அப்படியானால் 10 திருமணம் செய்தால் 500 பேரை உணர்வாளராக்கலாம் அல்லவா? எப்படி திட்டம் இது.
முதலில் தமிழக பெண்களை மணந்து உணர்வூட்டி தமிழக ஆட்சி பிடிக்கலாம், அதன் பின் இந்தியாவெங்கும் பெண்களை மணந்து உணர்வூட்டி இந்திய ஆட்சியினை பிடித்து தமிழனை பிரதமராக்கலாம், மொத்த இந்தியாவும் தமிழ்நாடாக்கலாம்.
அப்படியே உலகம் முழுக்க திருமணமாக செய்து, எல்லா நாட்டு பெண்களையும் திருமணம் செய்து சர்வதேச ஆதரவினை தமிழன் திரட்டலாம், அமெரிக்க பெண்களுக்கு உணர்வூட்டி தமிழர் அமெரிக்கா ஆளலாம், ஐநா சபை ஆளலாம், ரஷ்யாவும் சீனாவும் தகராறுக்கு வந்தால் அந்த பெண்களையும் விட கூடாது,
உலகமே தமிழர் ஆகலாம்.உலகம் முழுக்க மாமன் மச்சான் என எவ்வளவு உறவு வரும்? எப்படியான போராட்டம் இது? இதனைத்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றான் முப்பாட்டன்
பிரபாகரனுக்கு இந்த யோசனை எல்லாம் இல்லை, மொத்த சிங்கள பெண்களுக்கும் இப்படி உணர்வூட்டி இருந்தால் மொத்த இலங்கையும் ஈழம் ஆகியிருக்குமே?. இந்த அறிவு இல்லையே அவருக்கு, ஒழியட்டும்.
நைஜீரியாவில் பொக்கோ ஹராம் என்றொரு தீவிரவாத இயக்கம் உண்டு, இஸ்லாமிய இயக்கம். அது பெரிதாக எல்லாம் தாக்காது, எங்காவது பெண்கள் பள்ளி,கல்லூரி இருந்தால் அதனை வளைத்து எல்லா பெண்களையும் தூக்கி சென்று தன் இயக்கத்தாருக்கு திருமணம் செய்துவைத்துவிடும்,
அதாவது வீணாக போராடி இஸ்லாமை வளர்பதை விட, திருமணம் செய்துவைத்து பிள்ளைகளை வளர்த்தால் நாட்டில் இஸ்லாம் தானாக வளருமாம், அதனால் போக்கோ ஹராம் குழுவில் இணைய இளைஞர்களுக்கு ஏகபட்ட போட்டியாம், பின் திருமணம் செய்துகொண்டே இருக்கலாம் என்றால் யார் வரமாட்டார்கள்?, இதுதான் அந்த இயக்கத்தின் போராட்ட தத்துவம் கொள்கை.
உலகம் சிரிப்பாய் சிரிக்கும் இந்த போராட்டத்தை இந்த கட்சியினரும் ஆரம்பித்துவிட்டனர், உலகில் உள்ள அபத்தங்களின் மொத்த கூடாராமாக ஆகபோகின்றது இந்த கட்சி
விரைவில் 1க்கு மேற்பட்ட திருமணம் செய்து பெண்களுக்கு தமிழ் உணர்ச்சியினை ஊட்டியர் மாவீரர் எனப்படுவார், அது கர்ணல், பிரிகேடியர், மேதகு என திருமண எண்ணிக்கை பொறுத்து அமையலாம், திருமணத்தன்று இவர்கள் "வீர திருமண வாழ்த்து" தெரிவிப்பார்கள்.
இப்படி இவர்கள் பெரும் காமெடியர்கள் என்பது முன்பே தெரியும், ஆனால் படுபயங்கர காமெடிவாதிகள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிகொண்டிருக்கின்றது, தலைவன் அப்படி
No comments:
Post a Comment