Tuesday, September 6, 2016

உலகெல்லாம் பறக்கும் தட்டு மர்மம்

[caption id="attachment_3016" align="aligncenter" width="579"]fb_img_1473175433655 எசக்கியல் கண்ட பைபிள் இப்படித்தான் இருக்கும் என்கின்ற மாதிரி படம் இது[/caption]

உலகெல்லாம் பறக்கும் தட்டு மர்மம் பழையபடி ஆட்டிவைக்க ஆரம்பித்துவிட்டது, பேஸ்புக் மேம்பாட்டிற்க்காக அனுப்பபட்ட ராக்கெட் வெடிக்கும் முன் அதன் அருகே மர்ம பொருள் பறந்தது என்கிறார்கள்


ஒரு அமெரிக்க நடிகை வானத்தில் பறக்கும் தட்டை படம் பிடித்திருக்கின்றாள், முன்னதாக இரட்டை கோபுரம் தகர்க்கபட்டபோது அதனருகே ஒரு பறக்கும் தட்டு காணபட்டதாக ஒரு சர்ச்சையும் வந்தது.


1950 களுக்கு பின் அதனை பற்றி பலவாறு கட்டு கதைகள், சில உண்மைகள் என ஏராள சர்ச்சைகள்


இந்திய புராணங்களை திருடி ஹிட்லர் செய்தவை அவை எனவும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அவன் நுட்பத்தை திருடி செய்துகொண்ட நவீன விமானம் எனவும் ஒரு கருத்து


இல்லை அவர்கள் வேற்றுகிரக வாசிகள் இங்கு வந்து செல்பவர்கள் எனவும் ஒரு கருத்து


அல்ல அவர்கள் நமது வருங்கால சந்ததிகள் ஐன்ஸ்டீம் கூற்றுபடி காலத்தை மீறி பயணம் செய்து நம்மை பார்க்க வருகின்றார்கள் என இன்னொரு கோணம்,


இல்லை அவர்கள் பெரும் அறிவு கொண்டவர்கள், ஏதோ அண்டவெளியில் தேடுகின்றார்கள், நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தினை பார்த்து சிரிக்கின்றார்கள், அவ்வளவுதான். விமானம் ஓட்டுபவன் மாட்டுவண்டி பார்த்து சிரிக்கமாட்டானா? அப்படி என்கிறது ஒரு ஆய்வு.


எப்படியோ பல ஹேஸ்யங்கள்,பல அனுமானங்கள்


ஆனால் அமெரிக்காவின் ரோஸ்வெல்ட் 1950ல் பகுதியில் ஒரு பறக்கும் தட்டு கைபற்றபற்றபட்டதாகவும், அவர்களின் நுட்பங்களை திருடிய அமெரிக்கா விஞ்ஞானத்தில் சாதிப்பதாகவும் இன்னொரு கூற்று


இப்படி ஆளாளுக்கு பல கருத்துக்களை சொல்ல, தற்போது நாசா மெல்ல சொல்கிறது 1950களில் ஏலியன்ஸ்கள் இப்பக்கம் வந்திருக்கலாம்


இதுதான் இன்றைய ஹாட் டாபிக். ஆக நாசாவிற்கு ஏதோ புகைந்திருக்கின்றது.


இருக்க்டட்டும் ஆனால் பைபிளின் எசக்கியேல் ஆகமம் அழகாக சொல்கிறது, எசக்கியேல் எனும் தீர்க்கதரிசி தன் ஆண்டவனை கண்ட காட்சியினை 1ம் அதிகாரத்தில் விளக்குகின்றார்


”நான் கண்ட காட்சியாவது: இதோ வடக்கிலிருந்து புயல் காற்றெழும்பிற்று@ அப்போது பெரியதொரு மேகத்தையும், அதன் நடுவில் நெருப்பினுள்ளிருந்து துலங்கி மின்னிய ஒரு வகை வெண்கலத்தின் உருவத்தையும் கண்டேன்.
அவற்றின் கால்கள் நேரானவை@ உள்ளங்கால்கள் கன்றுக் குட்டியின் உள்ளங்கால்களைப் போல் இருந்தன@ அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல மின்னின.”


”அவற்றின் நான்கு பக்கங்களிலும் இறக்கைகளின் கீழ் மனித கைகள் இருந்தன. மிருகங்களுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.”


அவை நடக்கும்போது அவற்றின் இறக்கைகளால் ஏற்பட்ட ஒலியைக் கேட்டால், பெருக்கெடுத்து ஒடிவரும் தண்ணீரின் இரைச்சல் போலும், எல்லாம் வல்லவரின் குரலொலி போலும், திரண்டு செல்லும் சேனைகளின் ஆரவாரம் போலும் இருக்கும்@ அவை நிற்கும் போது தங்கள் இறக்கைகளைத் தாழ்த்தி விடும்


அவை நான்கிற்கும் முன் பக்கத்தில் மனித முகமும், வலப்புறத்தில் சிங்க முகமும், இடப்புறத்தில் எருது முகமும், பின் பக்கத்தில் கழுகு முகமும் இருந்தன


அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, இறக்கைகள் உயர்ந்து விரிந்திருந்தன. அவை ஒவ்வொன்றின் இறக்கைகள் நான்கில் இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன, மற்ற இரண்டும் அவற்றின் உடலை மூடிக்கொண்டிருந்தன.


அவை ஒவ்வொன்றும் நேர்த்திசையிலேயே நடந்தன. எங்கே போகவேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்@ போகும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா


நான் அம் மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை ஒவ்வொன்றின் அருகிலும் பூமியில் ஒரு சக்கரம் தென்பட்டது@ அவற்றுக்கும் நன்னான்கு முகங்கள் இருந்தன.”


”சக்கரங்களின் உருவமும் அவற்றின் வேலைப்பாடும் கடல் நீரைப் போல நீல வண்ணமாய் இருந்தன@ அவை நான்கும் ஒரே வடிவமுள்ளவையாய்க் காணப்பட்டன. சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றின. இவ்வாறு அவற்றின் அமைப்பும் வேலைப்பாடும் இருந்தன.”


”மிருகங்கள் போகையில் சக்கரங்களும் போயின. அவை நிற்கையில் இவையும் நின்றன@ அவை பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் அவற்றோடு மேலே எழுந்தன@ ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.


இது நிச்சயமாக பறக்கும் தட்டு என்கின்றார்கள், சிலர் நவீன விமானங்களின் டேக் ஆப் ஆகும் காட்சி என்கின்றார்கள்


ஆக ஆண்டவனே பறக்கும் தட்டில்தான் வந்திருக்கின்றார்


அந்த எசக்கியேல் ஒரு யூதன். ஏதோ ஒரு வேற்றுகிரகவாசி யூதர்களுக்கு தனி அறிவினை கொடுத்திருக்கின்றான், அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்கள் சாதிக்கின்றனர், அவர்கள் கடவுள் ஒரு ஏலியன்ஸ் என செல்கிறது ஆராய்சி


தெரியாது, ஆனால் நமது புராண கடவுள் எல்லாம் சட்டென்று வரும், அது மயிலிலோ பாம்பிலோ காளைமாட்டிலோதான் வரும், சக்கரம் இருக்கும் வண்டியில் கூட வராது


அதனால்தான் பசுமாடு, மயில் என்றால் இந்தியாவில் இன்றும் சர்ச்சை, அன்று வெள்ளையன் பெருசாளியினை கொன்றதும் சர்ச்சை ஆயிற்று


இப்படி அன்றே பறக்கும் தட்டில் விஞ்ஞான முறையில் வந்த கடவுளை வழிபடும் யூதன் எப்படி இருப்பான், அப்படித்தான் இருப்பான் இருக்கட்டும், அவன் விதி அப்படி.


இன்றும் அவனே நம்பர் 1 விஞ்ஞானி


உலகெல்லாம் பறக்கும் தட்டு வருகிறது என்கின்றார்கள், அதில் வருபவர்கள் அதி புத்திசாலி கடும் அறிவாளிகள் என்கின்றார்கள்


இலங்கையில் கூட அது வந்ததாக சர்ச்சை உண்டு "நட்சத்திர குள்ளர்கள்" என ஈழ தமிழில் அவர்களுக்கு அடைமொழியும் உண்டு, தமிழகத்தில் அப்படி பறக்கும் தட்டு வந்ததாக சர்ச்சை இல்லை


ஆனால் ஒன்று ரகசியமாக வந்திருக்கின்றது, 93 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் பகுதியில் வந்திருக்கின்றது, அது ஒரு ஆண் குழந்தையினை தவறவிட்டு சென்றிருக்கின்றது


முத்துவேலர் என்பவர் ஆண்குழந்தை இல்லாததால் அதனை தூக்கி வளர்த்திருக்கின்றார்


அது அறிவில் கூடிய இனம் அல்லவா? தமிழை அழகுற கற்றிருக்கின்றது, டெல்லி பக்கம் விழுந்திருக்குமானால் அது எல்லா மொழிகளையும் கற்று இந்தியாவினை ஆண்டிருக்கும்


ஆனால் அதன் தந்தைக்கு தமிழ் மட்டும் தெரிந்ததால் மிக அழகாக கசடற கற்றிருக்கின்றது, அந்த விபரீத தமிழறிவில் அது தமிழினத்தையே கட்டி ஆண்டிருக்கின்றது.


மானிட சிக்கல், மன சிக்கல், உடல் சிக்கல் என எதுவுமே அதனை அண்ட முடியவில்லை. எல்லா அரசியல், வாழ்வியல் சிக்கலையும் அது அசால்ட்டாக கடந்து சென்று புன்னகைக்கின்றது,


மனிதனால் இது சாத்தியமே இல்லை. மனிதனை பாதிக்கும் எதுவும் அவரை பாதிப்பதே இல்லை


இன்றும் 93 வயதில் மகா அழகாக நினைவுதிறன் கூட மங்காமல், எல்லா தகவலையும் விரல் நுனியில் வைத்து அட்டகாசமாய் புன்னகைக்கின்றது.


நிச்சமயமாக அவர் ஏலியன்ஸ்தான், மனித இனத்தில் இப்படி ஒருவர் இனி சாத்தியமே இல்லை

No comments:

Post a Comment