பெரியாறு, ஆழியாறு தொடர்ந்து சிறுவாணியிலும் கடும் அழிச்சாட்டியம் செய்கிறது கேரளம்.
இங்கோ நயந்தாரா 100 கோடியில் சினிமா எடுக்கபோகின்றாராம், அவர் திருமணம் செய்த அல்லது செய்யபோகும் இயக்குநரும் மலையாளியாம், இன்னும் ஏகபட்ட மலையாள இம்சைகள்
இது போதாதென்று கடந்தவாரம் தமிழக நடிகைகள் ஒரு திருமண பார்ட்டிக்க்கா சென்று மலையாள ஆடை அணிந்து போஸ் கொடுத்திருக்கின்றார்கள் இப்படியாக.
இந்த நடிகைகள்தான் நாளை சிறுவாணிக்காக நடிகர் சங்கம் கோவையில் போராட்டம் நடத்தினால் அங்கு கடுமையாக குதிப்பார்கள்.
அது என்னவோ கன்னடத்தை எதிர்க்கும் திரையுலகம் கேரளத்தை எதிர்க்காது என்ன ரகசியமோ?
இனி நீர் என்ன? ஆரல்வாய் செங்கோட்டை வழியாக வரும் காற்றையும் அவன் தடுக்கும் காலம் தொலைவில் இல்லை
தமிழகம் இவர்களை பார்த்து ரசித்துகொண்டே இருக்கட்டும்
இலங்கைக்கு போன பிரமுகர்களை, பாடகர்களை, எல்லாம் தடுத்து அழிச்சாட்டியம் செய்தார்கள். இலங்கையில் சூட்டிங் கூடாது என்றெல்லாம் ஒப்பாரி வைத்தார்கள், அது தமிழனுக்கு துரோக நாடு என்றார்கள்
காவேரி பிரச்சினை வரும்பொழுதெல்லாம் ரஜினியினை குதறுவார்கள், குஷ்பூ வடக்கத்தியாள் தமிழக பெருமை வீரம் தெரியாது என்பார்கள், இன்னும் என்னவெல்லாமோ சொல்வார்கள்
தெலுங்கு நடிகர் நடிகையருக்கு சென்னையில் என்ன வேலை?, விரட்டுவோம் என்பார்கள்.
ஆனால் இந்த காட்சி இந்த சிறுவாணி பிரச்சினையொட்டி வந்தபின்னும் இப்படி கேரளா சென்று மலையாள பாரம்பரியம் கொண்டாடிய இவர்களை பற்றி ஏதும் சொல்ல
"அவர்களை" காணவில்லை, ஒருவேளை பாரதியார் பாடலை படித்துகொண்டிருப்பார்களோ
"கேரள நாட்டிளம் பெண்களுடனே...."
https://youtu.be/qHSzzywZFb8
No comments:
Post a Comment