Sunday, September 25, 2016

இங்கும் அங்கும்....

முதல்வர் நலம்பெறும் வரை தமிழகத்தை ஆளப்போவது யார்?, மேய்ப்பன் இல்லா ஆடுகளை போல தமிழகம் ஆகிவிடாதா?

நமக்கு வரும் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான், அக்கட்சியின் தலைவி 24மணி நேரம் கண்காணித்தும் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கட்சிக்காரர்களின் "சுருட்டல்" உலகறிந்தது.

நத்தம் விஸ்வநாதனின் சொத்துபட்டியலே டெல்லிவரை அதிரவைத்திருக்கின்றது, அதுவும் அவர்களின் அம்மா கண்ணாளித்த காலங்களில்...

இப்பொழுது அவர் செயல்படமுடியாமல் இருக்கு இந்நேரத்தில் நரகாசுரன் பூமியினை சுருட்டி கக்கத்தில் வைத்ததுபோல தமிழகத்தை சுருட்டிவிடும் சாத்தியம் நிறையவே இருக்கின்றது

"காற்றுள்ள போதே தூற்றிகொள், அம்மா அப்பல்லோவில் இருக்கும்போதே சுருட்டிவிடு"




பாகிஸ்தானை இந்த உலகில் இருந்து தனிமைப்படுத்தாமல் விடமாட்டோம்: மோடி பேச்சு

இந்த உலகில் இருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்துவது இருக்கட்டும், இது இந்து உலகம் என இந்தியாவினை உலகம் தனிமைபடுத்திவிடும் அபாயம் இருக்கின்றது.

மசூதி இடிப்பு, யோகா, சமஸ்கிருதம், மாட்டுகறி என இந்தியாவினை உலகம் அப்படி ஒரு கோணத்தில் நோக்கிகொண்டே இருக்கின்றது

-

 

 

No comments:

Post a Comment