Tuesday, September 20, 2016

தமிழ்நாட்டில இந்த‌ முடிச்சவிக்கிகள் தொல்லை தாங்க முடியவில்லையப்பா....

ராம்குமார் சாவின் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கபடவேண்டும் : கலைஞர் எச்சரிக்கை

தலைவர் முடிச்சினை அவிழ்த்து உலகிற்கு சொன்ன தீர்வுகள் ஏராளம் இருப்பதால் இந்த முடிச்சினை அவிழ்க்கும் வரை விடமாட்டார்.

ஆனால் அண்ணாமலை பல்கலை கழக‌ உதயகுமார் வழக்கு, தா.கிருட்டினன் வழக்கு, மதுரை பத்திரிகை எரிப்பு வழக்கு, ஸ்பெக்ட்ரம் வழக்கும், ஏர்செல் வழக்கு, அண்ணா நகர் ரமேஷ் வழக்கு, சாதிக் பாட்சா வழக்குகளில் எல்லாம் மர்ம முடிச்சினை யார் அவிழ்ப்பது என்பதுதான் தெரியவில்லை


அது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த சுவாதி, ராம் குமார் சாவில் உண்மை அறியும் குழு, திலிபன், தமிழச்சி, கருப்பு முருகானந்தம், மஞ்சள் கருணாநிதி என ஏகப்பட்ட முடிச்சவிப்பாளர்கள் வந்துவிட்டார்கள்

அடடடா....தமிழ்நாட்டில இந்த‌ முடிச்சவிக்கிகள் தொல்லை தாங்க முடியவில்லையப்பா.............




சுவாதி கொலை, ராம்குமார் சாவு இரண்டையும் சிபிஐ விசாரிக்கவேண்டும் : திருமாவளவன்

நல்லது, அப்படியே இவர் ஈழம் சென்று பிரபாகரனோடு விருந்து உண்ட சம்பவத்தையும் சிபிஐயினை மூன்றாவதாக விசாரிக்க சொல்லலாம்.




 

No comments:

Post a Comment