நெல்லைமாவட்டம் கள்ளிகுளத்து ஆட்கள் யாராவது இருக்கின்றீர்களா?
அல்லது தெட்சன மாற நாடார் சங்கத்து பிரமுகர்களாவது ஆங்காங்கு முகநூலில் அலைகின்றீர்களா?
கள்ளிகுளம் நாடார்சங்க கல்லூரி கொண்டுவந்தது சாதித்தது ஒரு பஞ்சாயத்து தலைவர் என ஒருவன் சவுண்ட் மைக்கில் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றானாம்
அது கவுசானல் எனும் ஒரு பாதிரியால் தொடங்கபட்ட அந்த முயற்சி பின்னாளில் சங்கத்தால் நனவானது என்பதுதான் இதுவரை அறியபட்டது
இப்பொழுது இவன் ஏதேதோ சொல்ல ஆரம்பித்துவிட்டான்
சங்கத்து பிரமுகர்களே, உங்கள் கல்லூரி பற்றி கொஞ்சமாவது சமூகத்திற்கு சொல்லிவைத்துவிடுங்கள்
இல்லை என்றால் அன்றைய தாளாளர் சிவந்தி ஆதித்தன் முதல் இன்றைய வைகுண்டராஜன் வரை எல்லோரும் அந்த பஞ்சாயத்து தலைவரால் உருவாக்கபட்டவர் என கிளம்பிவிடுவான்.
சங்கத்தின் வரலாற்றையே மாற்றிவிடுவான்
கொஞ்சம் அவனிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்
இப்பொழுது அவன் 50 ஆண்டுகள் கடந்து நிற்கும் அந்த கள்ளிகுளம் பள்ளியினை, 150 ஆண்டுகள் கடந்து நிற்கும் கள்ளிகுளம் ஆலயத்தை அந்த பஞ்சாயத்து தலைவர்தான் கொண்டுவந்தார் என அடுத்த பதிவு போட்டுகொண்டிருப்பான்
அதனை அம்மக்கள் பார்த்துகொள்ளட்டும்,
சங்கத்தை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள்
ஜால்ரா கேள்விபட்டிருக்கின்றேன், மூடஜால்ரா இப்பொழுதுதான் பார்க்கின்றேன்,
நான் இந்த சாதி என ஒருநடிகரின் சாதியினையே பேனர் வைத்து பெருமை பாராட்டியவன், இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் அவர் தமிழர், நாங்கள் தமிழர்கள் என தொடங்கிவிட்டான்.
எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு.
இன்னும் என்னென்ன பேசுவானோ தெரியவில்லை,
ஆனால் எல்லாம் இன்னும் 7 மணி நேரத்த்தில் பல்டி அடிப்பான்.
எனினும் சங்கத்து ஆட்களே இவனிடம் கவனமாக இருங்கள்.
ராசா, கள்ளிகுளத்தில் அந்த மாதா பக்கத்தில் இருப்பதும் அவர் சிலைதானே?, நன்றாக பார்த்து சொல்லமுடியுமா?
வெள்ளிகிழமை ஆனால் இவன் தொல்லை தாங்க முடியவில்லை,
No comments:
Post a Comment