Wednesday, September 14, 2016

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்


தலைவராக அறிவித்தாகிவிட்டது அவ்வளவுதானே, வந்து தலைவராக சத்யமூர்த்தி பவனுக்கு வாருங்கள், அமருங்கள், பேசுங்கள் அப்பொழுது தெரியும்.


எப்படிபட்ட பெருங்கலவரமும் வெடிக்கலாம், காரணம் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இம்சை தாங்க முடியா தலைவர் டெல்லிக்கு அலறி அடித்து ஓடி கெஞ்சுவார் என்னை தற்காலிக தலைவர் என அறிவியுங்கள், முடியவில்லை




இங்கிருந்து இளங்கோவன் சீறுவார், "அது எங்களுக்கு தெரியாதா? டெல்லி சொல்லித்தான் தெரியவேண்டுமா?"


ரொம்ப நாளைக்கு பின் குஷ்பூ அதிரடி பேட்டிகொடுக்கும் நேரம் இது,


அவர் பேட்டி கொடுப்பதே ஒரு அழகு. நிதானமாக வெகு இயல்பாக பேசுவார். ரசிக்க கூடிய பேட்டி அது :)


பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது, இனி அடிக்கடி பார்க்கலாம்.


தங்கபாலு, வசந்தகுமார், சிதம்பரம், வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், விஜயதாரணி எல்லாம் இனி கையில் பேப்பரோடு அலைவார்கள்.


முதலில் அன்னை சோனியாவிற்கு கட்டுபடுகின்றோம் என்றுதான் தொடங்குவார்கள், அதன் பின் ஆடுவார்கள் பாருங்கள், அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்


எப்படியோ ராகுல் காந்தியும் சோனியாவும் பேக்ஸ் மிஷினை அணைத்துவிட்டு, போன் நம்பரை மாற்றிவிட்டு முடிந்தால் வீட்டையே மாற்றிவிட்டு கொஞ்சநாளைக்கு தலைமறைவாகும் நேரம் வந்தே விட்டது.


சித்தராமையாவிற்கு வந்த சோதனையினை எப்படி திசை திருப்பி விட்டிருக்கின்றது பார்த்தீர்களா? இதுதான் காங்கிரசின் ராஜதந்திரம்.


காவேரி வெள்ளம் வந்தால் கொள்ளிடத்திற்கு திருப்புவார்கள், இப்போது எல்லாம் காவேரி சிக்கல் வந்தால் சத்திய மூர்த்திபவனுக்கே திருப்பிவிடுகின்றார்கள்


கர்நாடகாவில் இருக்கும் பாதுகாப்பு படைகள் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு திரும்பவேண்டிய நேரம் இது.


குஷ்பூவின் அறிக்கை என்ன சொல்கிறது என பார்க்கலாம், பரபரப்புகளை ஏற்படுத்துவதில் அவர் பேச்சு முக்கியமானது, காங்கிரசில் வேறு இருக்கின்றார்


அதுவும் இந்த சூழலில் பொறி பறக்கலாம்



No comments:

Post a Comment