Thursday, September 22, 2016

அடிக்கிற ராணுவம் ஊடகங்களை குரைக்கவே விடாது

ஏதும் அந்நிய நாட்டு தீவிரவாதிகள் தாக்கினால் 30 நிமிடத்தில் எல்லை கடந்தோ அல்லது கொல்லை கடந்து துவம்சம் செய்யும் இஸ்ரேல் ராணுவம்

அமெரிக்கா கழுகு போல கண்காணித்து படார் என தூக்கும்.

இவைகளில் எல்லாம் ஒரு சத்தமும் இருக்காது, ஒரு செய்திகள் கூட வராது, எல்லாம் முடிந்தபின் உலகமே பேசிகொண்டிருக்கும்


காரணம் எதிரியினை அடிக்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் அவன் சுதாரிப்பதற்குள் போட்டு தள்ளவேண்டும் என்பது பாதுகாப்பு தொடக்க பாடம்.

ஆனால் மன்னன் ஊர்வலம் போவது போல, நடிகை நகைகடை திறக்க வருவதை போல, எல்லையில் இந்தியபடைகள் நகர்வினை பக்கம் பக்கமாக இந்திய பத்திரிகைகள் எழுதும்போதே தெரிகின்றது ஒரு மண்ணாங்கட்டி தாக்குதலும் நடக்கபோவதில்லை என்பது .

தீவிரவாதிகள் இதற்குள் ஆப்கான் என்ன உஸ்பெக்கிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்,

அடிக்கிற ராணுவம் ஊடகங்களை குரைக்கவே விடாது.




ஒரு கொசுறு

ராம்குமாரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் : அம்பேத்கர் மக்கள் இயக்கம்

நாடக காதல் போல இனி நாடக கொலைகளும் நடக்கலாம்.

சரி ராம்குமார் குடும்பத்திற்கு 1 கோடி என்றால் ஸ்வாதி குடும்பத்திற்கு 3 கோடியாவது கொடுக்கவேண்டும் அல்லவா?


சரி ராம்குமார் குடும்பத்திற்கு 1 கோடி என்றால் ஸ்வாதி குடும்பத்திற்கு 2 கோடியாவது கொடுக்கவேண்டும் அல்லவா?

இல்லை அதிலேயும் முற்பட்ட சாதி என சொல்லி 10 லட்சம் கொடுத்தால் போதுமா?




 


No comments:

Post a Comment