Thursday, September 29, 2016

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி : கடும் பதட்டத்தில் எல்லைபகுதி


இந்தியா தனது தாக்குதலை தொடங்கிவிட்டது என ராணுவ தளபதி அறிவித்திருக்கின்றார், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ சீருடையிலும், இந்திய காஷ்மீரில் தீவிரவாதிகளாகவும் அலையும் ஏராளமான பாகிஸ்தானியர் கொல்லபட்டிருக்கின்றனர்


அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் 2 வீரர்கள் செத்ததாக ஒப்புகொண்டிருக்கின்றது. அதற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை




ஒரு பலசாலி தன்னால் முடிந்தமட்டும் பார்த்துவிட்டே தன் பலமிக்க ஆயுதத்தை இறுதியாக எடுப்பான், இந்தியா அப்படித்தான் மோதுகின்றது


பலவீனமானவனோ எடுத்த எடுப்பிலே தன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பின்னால் ஒழிந்துகொள்வான், அப்படித்தான் பாகிஸ்தான் அணுகுண்டினை வீசுவோம் என ஒப்பாரி வைக்கின்றது


வீச வேண்டும் என அது தயார்படுத்தினாலே, அடுத்த கணம் பாகிஸ்தானே இருக்காது.


எந்நேரமும் முழு யுத்தம் எல்லையில் வெடிக்கலாம், பார்க்கலாம்


நாமாக அவர்களை சீண்டவில்லை, அவர்கள் சீண்டியபின் விடுவதாகவும் இல்லை.


இன்றுமாலை நடக்கும் அனைத்துகட்சி கூட்டத்திற்கு பின் மோடி என்ன தெரிவிப்பார் என பார்ப்போம்.


யுத்தம் என வந்தபின் அனைத்துகட்சி கூட்டம் எல்லாம் எதற்கு?


எதாவது கட்சி யுத்தம் வைத்து அரசியல் செய்தால் அதனை அரசியல களத்திலிருந்து விரட்டி அந்தமானுக்கு அனுப்பினால் முடிந்தது பிரச்சினை.


நீங்கள் கலக்குங்கள் மோடி, பாரதம் உங்கள் பின்னால் இருக்கின்றது



No comments:

Post a Comment