காவேரியில் நீர்வருமோ இல்லையோ, பருவ மழை வருமோ இல்லையோ, எல்லையில் யுத்தம் வருமோ இல்லையோ, ஒன்று வந்தே விட்டதாம்.
நீண்ட நாளைக்கு பின் பின் பிரபுதேவா நடித்த தமிழ்படம் திரைக்கு வர இருக்கின்றதாம், வரட்டும்.
நயந்தாராவின் ரசிகர் சிகரங்களின் எவரெஸ்ட்டான நண்பர் Babu Rao தலமையில் அப்படத்தினை புறக்கணிக்க போகின்றார்களாம், செய்தி அறிந்து பிரபுதேவா டியுன் இல்லாமலே ஆடி கொண்டிருக்கின்றாரம்.
இதுபற்றிய ரகசிய தகவல் எல்லா நயன் ரசிகர்களையும் எட்டியிருப்பதால் படம் இனி திருட்டு டிவிடி, இலவச இணையத்தில் கூட ஓட முடியாத நிலை வந்துவிடும் என ஒரு செய்தி வருகின்றது.
சிம்பு நடித்த வாலு, போடா போடி போன்ற படங்கள் அப்படித்தான் புறக்கணிக்கபட்டதாம், நயனே நடித்தாலும் இதுநம்ம ஆளு படத்தினையும் அப்படி குப்பைக்கு அனுப்பி விட்டார்களாம்.
தமிழகத்தில் இதுவரை எந்த நடிகைக்காவது இப்படி ஒரு ஆதரவு கூட்டம் கூடியிருக்கின்றதா? ம்ஹூம்.
எப்படிபட்ட ரசிகர்கள், எம்மாதிரி எல்லாம் அவர்கள் தலைவியின் மனதினை குளிர வைக்கின்றார்கள். இதோ தேவி படத்தினை எங்கள் தேவிக்காக புறக்கணிக்கின்றோம் என கிளம்பிவிட்டார்கள். இவர்கள் அல்லவா ரசிகர்கள்.
Alankara Benedict நாமும் இருக்கின்றோமே,
தேர்தல் தோல்வி சோகத்தில் இருந்து நம் தலைவி வெளிவந்ததாக தெரியவில்லை,
வாருங்கள் ஜெயப்பிரதாவினை அழைத்து வந்து உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி அவருக்காக உழைப்போம், ஒரு பஞ்சாயத்து தலைவராகவாவது அமர்த்தி ஆனந்த கண்ணீரை துடைத்து கொள்வோம்.
No comments:
Post a Comment