Thursday, September 29, 2016

எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது

எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது


அந்த பரிதாபத்துகுரிய நிலையிலிருக்கும் தலைவர்கள் மீதா பெட்ரோல் குண்டு எறிய சென்றான் இவன். அவர்களே ஏதாவது செய்து தாங்கள் இருப்பதை, இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருப்பதை நிரூபிக்க படாதபாடு படுகின்றார்கள்.




கட்சியில் இணைந்த சரத்குமாரையே 1 மணிநேரத்திற்கு மேல் தக்க வைக்க முடியாத கட்சி அது, முன்னாள் பிஜேபி காரரான திருநாவுக்கரசர் இப்பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர். அப்படி இருக்கின்றது அவர்கள் நிலை. தேர்தலில் இவர்களாக சென்று நின்றாலும் கூட்டணியில் சேர்க்க யாருமில்லை,


அந்தோ பரிதாபம்.


அவர்கள் மீது பெட்ரோல் வீசசென்ற இவன் எவ்வளவு பரிதாபத்துகுரியவன்?


அடேய் பெட்ரோலுக்கு பதிலாக 2 பாட்டில் குளுக்கோஸ் கொண்டு கொடுத்து, உங்கள் தமிழக பிரிவு கட்சிக்கும், உங்களுக்கும் இதுதான் தேவை என கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?


ஆயிரம் பெட்ரோல் குண்டுகள் அவர்கள் அடிமனதில் வெடித்திருக்காதா? கண்ணீர்விட்டு உன் முன்னே கதறி அழுதிருக்கமாட்டார்களா?


அதனை விட்டுவிட்டு அந்த பாவபட்ட பரிதாப ஜீவன்கள் மீதா குண்டு எறிய துணிந்தாய்?


நீ வேண்டுமானால் பார், விரைவில் சிறைக்கு வந்து என்னை மதித்து, எங்கள் போராட்டத்தையும் மதித்து எம்மீது குண்டு எறியும் அளவிற்கு வந்திருக்கும் உன்னை பாராட்டுகின்றேன் என அவர்கள் கண்ணீர் மல்க சிறைக்கு வந்து உனக்கு நன்றி தெரிவிப்பார்கள்.


காரணம் டெல்லி தலமை கூட கண்டுகொள்ளாத, தமிழகம் சுத்தமாக கண்டுகொள்ளாத அவர்களை, நீ இவ்வளவு தூரம் சீரிய்சாக சிந்தித்து, உயிரை பணயம் வைத்து குண்டு வீச சென்றது அவர்களை பொருத்தவரை எவ்வளவு பெரும் அங்கீகாரம் தெரியுமா?


அது அவர்களுக்கு மட்டும்தான் புரியும்.



No comments:

Post a Comment