Tuesday, September 27, 2016

நாம் அகண்ட தமிழகம் அமைப்போம்...

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது, 50 இலட்சம் மதிப்புள்ள 33 செம்மரங்கள் பறிமுதல்.


இதற்கு அங்கிள் சைமன் மற்றும் அடிப்பொடிகளின் முழக்கம் இப்படி இருக்கலாம்


"இதற்குத்தான் திருப்பதியினை மீட்டு தமிழகத்தோடு இணைக்கவேண்டும், அகண்ட தமிழகம் வேண்டும் அதற்கு தமிழன் முதல்வராக வேண்டும் என இன உணர்வாளர்கள் உயிரை பிடித்து கொண்டு போராடுகின்றோம், எல்லைசாமி வீரப்பன், இனச்சாமி பிரபாகரன் படம்பிடித்து போராடுகின்றோம்.


அதன்பின் தமிழக‌ பகுதியில் தமிழன் 50 லட்சம் திருடினால் எப்படி செய்தி வெளிவரும்? தமிழன் தமிழக செம்மரத்தை திருடாமல் அடுத்தநாட்டிலா திருடுவான் என சொல்லி சமாளித்துவிடலாம்


ஆக திருப்பதிபகுதியினை தமிழகத்தோடு இணைத்து தெலுங்கனை விரட்டினால் தமிழன் உரிமத்தோடு திருடிவிட்டு போகிறான் தமிழினமே....


குடகு வரை தமிழகமாக இருந்திருந்தால் எல்லைச்சாமி வீரப்பன் எவ்வளவு சந்தணம் வெட்டியிருப்பான், அது கன்னடம் என்பதால்தானே பிரச்சினை கூடிற்று


ஆக திருப்பதியினை மீட்காத, குடகினை மீட்காத, மைசூரை இழந்த திராவிட கட்சிகளின் கொடுமையே இம்மாதிரி மரம்வெட்டும் சம்பவங்கள்


என் அருமை தமிழகமே, நாம் அகண்ட தமிழகம் அமைப்போம், எல்லைகளை மீட்போம், அதன் பின் அவை தமிழக மரங்களாகும், எவனும் வெட்டட்டும், எவனும் சம்பாதிக்கட்டும், கொள்ளையடிப்பவன் தமிழனாக மட்டும் இருக்கட்டும்.."

No comments:

Post a Comment