காய்ச்சலையே கண்டிக்க துணியும் பெரும் சீற்றம் அந்த கூட்டத்தினை தவிர யாருக்கு சாத்தியம்?
தேவர் பெருமகன் வேறுமாதிரியானவர், ஆனால் வோட்டு ஆசிகளை நிச்சயம் அளிப்பார். அதற்காக அவரை கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டீஸ், தமிழக அகத்தியர், சித்தர்கள் வரிசைக்கு கொண்டு செல்வதெல்லாம் பெரும் அபத்தம்
இன்னும் யாரையெல்லாம் கண்டிக்கபோகின்றார்களோ தெரியவில்லை, அடுத்த கண்டிப்பு இன்னும் குணமாக்காத மருந்து மீது திரும்பலாம்.
எதற்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெயரை அப்பல்லோ நிர்வாகம் ரகசியமாக வைத்திருப்பது நல்லது.
இன்னொரு கும்பல் அம்மா ஆணையிடாமல் ஆஸ்பத்திரியில் தூங்கும்போது இந்த சூரியன் எப்படி தானாக உதிக்கலாம், இந்த மழை எப்படி பெய்யலாம், காற்று எப்படி வீசலாம் இதெல்லாம் அம்மாவினை அவமதிக்கும் செயல் அல்லவா? என பேனர் அடித்துகொண்டிருக்கும்
நிச்சயம் கண்டிக்கும், அம்மா ஆணையிடாமல் உதிக்கும் சூரியனனே உம்மை கண்டிக்கின்றேன், ஏ நிலவே உன்னை விடபோவதில்லை என பலர் கிளம்பலாம்.
முதல்வருக்கு ஒரு வகை சிகிச்சை என்றால், இம்மாதிரியானவர்களுக்கும் வேறு வகை சிகிச்சை நிச்சயம் தேவை.
முணு முணுப்பு
காவல் துறை நிர்வாகம் சீர்கெட்டிருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம்: கலைஞர்
இவரது இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்சியில்தான் அந்நியநாட்டு புலி தீவிரவாதிகள் சென்னை வந்து பத்மநாபா படுகொலையினை செய்தனர், அந்த குற்றவாளிகளை இவர் காலத்து காவல்துறை ஓட ஓட விரட்டி சுட்டு கொன்றது அல்லவா?
எவ்வளவு பெரும் நடவடிக்கை எல்லாம் எடுத்து தமிழகத்தை அமைதி பூங்காவாக்கினார்?
அதன்பின் மனம் பொறுக்காத ராஜிவ்காந்தி அவராக சென்னை வந்து செத்தார்.
No comments:
Post a Comment