முப்பாட்டன் முருகன் என சொல்லி கொடி பிடித்து ஒரு மாதிரி அலைபவர்களுக்கு என்ன சொன்னாலும் புரிவதில்லை, சிந்திக்கும் திறனும் இல்லை
எது சொன்னாலும் நீ, உன் குடும்பம், உன் ரத்தம், உன் வம்சம் ஏய்.. என ஒரு மாதிரி அகோரிகள் போல அலறிகொண்டே இருக்கின்றார்கள்.
ஏன் என்றால் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை, சுத்தமாக இல்லை, கத்தும் திறன் கொட்டி கிடக்கின்றது அதனாலென்ன கழுதை கத்தாத கத்தலா? அது இம்சை அல்லவா?
தொடக்க காலத்தில் மனிதன் அப்படித்தான் இருந்திருக்கின்றான், அவனுக்கு சுயமாக சிந்திக்க தெரியவில்லை, சக்தி இல்லை
ஒரு பழத்தில் அந்த சக்தி இருந்திருக்கின்றது, பைபிளில் பாம்பு ஏவாளிடமும் ஆதாமிடமும் அதனை தின்ன கொடுத்தபின்புதான் அவர்களுக்கு சுயநினைவே வந்திருக்கின்றது
இந்துமதத்திலும் அக்கதை வருகின்றது, மிக சிறந்த ஞானபழத்தினை யாருக்கு கொடுப்பது எனும் சிக்கலில் பிள்ளையார் ஸ்கோர் செய்துவிட முருகன் கோபபட்டு பழனிக்கு வந்துவிட்டார்
ஆக ஞானபழம் தின்ற பிள்ளையார் பெரும் சக்தியாகிவிட்டார், ஞானம் கிடைத்திருக்கின்றது. அதனால் திருமணம் கூட செய்துகொள்ளவில்லை, அபாயங்களை எல்லாம் சிந்தித்து தவிர்த்திருக்கின்றார், இருக்கட்டும்
முருகன், தந்தைக்கே போதித்த தனையன் அவர். அமைதியான கடவுள். அவருக்கு ஞானப்பழம் எல்லாம் தேவை இல்லை
ஆனால் அவரை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு ஞன்னபழம் கட்டாயம் தேவை, ஆக டம்ளர் பாய்ஸ்க்கு தேவை
ஏய் டம்ளர் பாய்ஸ், முப்பாட்டன் முருகன் என்பதை முப்பாட்டன் பிள்ளையார் என மாற்றி சொல்லியாவது அவரிடம் இருந்து ஞானபழம் பெறபாருங்கள்
கொஞ்சமாவது அறிவு வரும், முப்பாட்டனை மாற்றுங்கள்.
இனி உங்கள் முப்பாட்டன் முச்சந்தி பிள்ளையார்.
நாம் தமிழர் மீது ஏன் இந்த கோபம், காள்ப்புணர்ச்சி?
ReplyDeleteஏனிந்த எதிர்மறை கோழைத்தனம்?