Monday, September 5, 2016

ஆகாய பந்தலிலே ...


Image may contain: night and sky


உலகில் செய்திகளுக்கு பஞ்சம் வரும்பொழுது ஒரு கதை கிளம்பும், எங்கிருந்து கிளம்புமோ தெரியாது, அட்டகாசமாக வரும்.


பூமி அப்படி அழியபோகிறது, ஏதோ மோத போகிறது, சூரியன் சுற்றாமல் நிற்க போகின்றது என பல செய்திகள் பயமுறுத்தும்.


இப்பொழுது ஒரு பெரும் விண்கல் பூமிக்கு அருகில் வருகிறது எனும் செய்தி. அது பூமி தப்புமா? ம்ஹூம் வாய்ப்பே இல்லை எனும் அளவிற்கு சில செய்திகள் வருகின்றன‌.


முன்பு மாயன் காலண்டர், நெப்ரு கிரகம் என பல விஷயங்கள் அப்படியானவை.


பண்டைய காலத்தில் வானியல் அறிவு இன்று இருப்பதை விட மிக மேலாக இருந்திருக்கின்றது, எப்படி என தெரியவில்லை. இந்தியா மட்டுமல்ல சுமேரியா, மாயன்கள் ஆகிய அக்கால வல்லரசுகள் எல்லாம் வானியல் அறிவில் இன்று எட்டாத இடங்களை அசால்ட்டாக எட்டியிருக்கின்றன‌.


பெரும் தொடர்பு எப்படி இருந்தது? எப்படி அறுந்தது என்பது தெரியாது. ஆனால் எல்லா கோள்களும் அவற்றின் அமைப்புக்களும் அழகாக தெரிந்திருக்கின்றது.


இந்த விஞ்ஞானம் 60 ஆண்டுகளுக்கு முன்புதான் வானத்தை ஆராய தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு கோளாக ஆராய்ந்தது 9 கோள்கள் என்றது. சனி கிரகம் கறுப்பு என்றது. செவ்வாய் சிகப்பு என்றது. வியாழன் பெரிது என்றது. இப்படி புதிதாய் சொன்னதாக சொன்னது.


அதனை வைத்து ஏகபட்ட ஹாலிவுட் படங்கள் வந்தது, பயங்கரமாக எல்லாம் சிந்தித்தார்கள், நாளொரு மாற்றமாக வானத்தை ஆராய்ந்துபார்த்துகொண்டே இருக்கின்றார்கள்.


நிச்சயமாக சொல்லலாம் அவர்களின் இன்றைய பெரும் ஆராய்ச்சி வான ஆராய்ச்சி, தேடிகொண்டே இருக்கின்றார்கள், பல விஷயங்களை பார்த்து ஆதாரம் இதோ என சொல்கின்றார்கள், அறிவியல் அல்லவா? ஆதாரம் வேண்டும்.


நமது வானியல் சாஸ்திரங்கள் இவற்றை என்றோ பதிந்து வைத்திருந்தன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. செவ்வாய், சனி கோள்களின் அமைப்புகள் நமது வானியலில் சொல்லபடாததா? எல்லாம் அன்றே தெரிந்திருக்கின்றது, இன்றுள்ள விஞ்ஞானம் அதற்கு சான்று கொடுத்து உறுதிபடுத்துகின்றதே தவிர வேறு அல்ல.


சுமேரிய எகிப்து வானிலை சாஸ்திரிகள், நெப்ரு எனும் ஒரு தறுதலை கிரகம் உண்டு என சொல்லி இருந்தார்கள். அது மற்ற கோள்களை போல ஒழுங்காக சூரியனை சுற்றுவதில்லை, அது மு.க அழகிரியின் கிரகமாக இருக்கலாம். அதன் வட்டம் வேறுமாதிரியானது. அது பூமியில் மோதும் வாய்ப்பு உண்டு என அவர்கள் அன்றே சொல்லி இருந்தார்கள்.


அதனை தேடியமட்டும் கிடைக்கவில்லை.. தொலை தூரத்தில் இருக்கலாம்... அல்லது எங்காவது மோதியிருக்கலாம் என முடிவாயிற்று.


மற்றபடி பூமிக்கு இருக்கும் ஆபத்து விண்கற்கள். கோடான கோடி குறைபிரசவ வானியல் குழந்தைகள் அப்படி உண்டு. அவை அவ்வப்போது சூரிய மண்டலத்தில் வருவதும் உண்டு, சிறியவை பூமிபரப்பில் வந்தால் எரிந்துவிடும். பெரியவை வராது. அப்படி வந்தாலும் எரிந்து மக்கள் இல்லா பகுதிகளில்தான் விழும்.


இந்த பூமியினை, இறைவன் அப்படி கண்காணித்துகொண்டிருக்கின்றான்.


மிக மிக ஆச்சரியமானது அண்டவெளி. அந்தரத்தில் தொங்கும் விஷயங்கள் எல்லாம். ஆனால் எல்லாம் இயங்கிகொண்டிருக்கின்றன. ஒன்றை ஒன்று சுற்றிகொண்டே இருக்கின்றது, சந்திரன் பூமியை, பூமி சூரியனை சூரிய குடும்பம் இன்னொரு பொருளை என சுற்றுகின்றது.


(நாம் ஜெயபிரதாவினை சுற்றுகின்றோம், அவர் எம்பி பதவியினை சுற்றுகின்றார், எம்பி பதவி யாரையோ சுற்றுகின்றது, அப்படி எதனையாவது ஒன்றை நாமும் சுற்றிகொண்டே இருக்கின்றோம்)


ஆனால் மிக சரியான திட்டமிட்ட இயக்கம் அது. அதனைத்தான் ஐன்ஸ்டீன் சொன்னார். கடவுளுக்கு இம்மாபெரும் பிரபஞ்சத்த்னை கட்டியாளும் பொறுப்ப்பு இருக்கின்றது. இந்த இயக்கம் மகா ஆச்சரியமனாது. அந்த அற்புத சக்தி மிக்க கடவுள் ஏன் அற்ப மானிட வாழ்க்கையில் குறுக்கிடவேண்டும்?


அற்புதமான சிந்தனை, அதுதான் ஐன்ஸ்டீன். தமிழக சித்தர்கள் அண்டத்தையும் உடலையும் ஒப்பிட்டு சொன்னார்கள், எப்படி என சரியாக விளக்க யாருமில்லை, பெரும் தத்துவங்கள் ஒளிந்திருக்கலாம்.


நவீன கால விஞ்ஞானம் பெரிதும் வியப்பது, அண்டவெளியில் காணப்படும் அமைதி. அவ்வளவு கோள்கள் இயங்கினாலும் ஒரு சிறு சத்தமும் அங்கே இல்லை. பெரும் விநோதம் அது.


ஒரு தத்துவம் நமக்கே புரியும் அது எல்லைகளை கடந்துவிட்ட மனம் ஒரு ஆழ்ந்த அமைதியினை அனுபவிக்கும். அதுதான் அண்டவெளியில் இருக்கும் பெரும் அமைதி, மகா அமைதி. இன்னும் எவ்வளவு தத்துவம் இருக்கின்றதோ தெரியவில்லை.


ரஷ்ய வானிலை அறிஞன் கூறினான், நான் ஏராளமான விண்கற்களை பார்க்கின்றேன், பூமியினை தொலைத்துவிடுவது போல வரும். ஆனால் ஒரு கட்டத்தில் விலகியே செல்கிறது, வானத்தில் புரிந்துகொள்ளமுடியா மர்மங்களில் அதுவும் ஒன்று


அதாவது இறைவன் படைப்பில் அவை எல்லாம் அவனுக்கு கட்டுபட்டு நிற்கின்றது, ஒன்றின் இயக்கத்தில் இன்னொன்று தலையிடுவதில்லை. ஒன்றின் பணியில் இன்னொன்று குறுக்கே வராது.


வந்திருந்தால் இந்நேரம் இந்த பிரபஞ்சமே இருக்காது, அப்படி வராததால்தான் வானிலை கோள்கள் அமைதியாக இயங்கிகொண்டிருக்கின்றன.


அவை என அவை? எல்லா கடவுளின் படைப்புக்களும் அப்படியே. கடலுக்கு தன் எல்லை தெரிகின்றது, ஆறுக்கு பாதை தெரிகின்றது. அவற்றின் எல்லையினை அவை தாண்டுவதில்லை


மனிதன் மட்டுமே வித்தியாசமான படைப்பு, அடுத்தவன் வழியில் குறுக்கிடுவது வம்புக்கு அழைப்ப்பது, தான் மட்டுமே எல்லாம், நானே எல்லோம் என யாருடனாவது ஒரு மோதலை நிகழ்த்திகொண்டே இருப்பது எனும் குணம் அவனுடையது.


அறிவில்லா விஷயங்கள் கூட ஆண்டவன் இட்ட கட்டளைபடி அடங்கி நடக்கும்பொழுது, அறிவுள்ள மனிதன் அடங்காமல் அடுத்தவன் வழியில் குறுகிட்டு இவ்வுலகத்தை யுத்த பூமியாக வைத்திருப்பது விசித்திரம், இந்த பூமி அவனால்தான் மனிதன் வாழ லாயகற்ற கிரகமாக மாறுமே ஒழிய, வேறு எதனாலும் அல்ல‌


வானத்து கற்களோ, கோள்களோ இப்பூமியினில் மோதபோவது இல்லை, காரணம் அவை இறைவன் இட்ட எல்லையினை கொஞ்சமும் மீறபோவதில்லை. தன் இயக்கத்தையும் நிறுத்தபோவதில்லை.


அதனதன் வழி அதனதற்கு.


மனிதனும் அவைகளை போல இயங்கினால் இவ்வுலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்?













No comments:

Post a Comment