Wednesday, September 28, 2016

கேத்ரீனா கைப்பிற்கு அன்பளிப்பாக வைர செருப்பினை வழங்கினார் உசேன் போல்ட்




பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப்பிற்கு அன்பளிப்பாக வைர செருப்பினை வழங்கினார் உசேன் போல்ட்







Stanley Rajan's photo.


பாலிவுட்டை கலக்கிகொண்டிருக்கின்றது வைரசெருப்பு விவகாரம். அதனை காணவே கூட்டம் கூட்டமாக வருகின்றார்களாம், இனி சினிமாவில் அதை அணியவும் அம்மணி கூடுதல் கட்டணம் கேட்கலாம் எனுமளவிற்கு பெரும் பிரபலமாகிவிட்டது செருப்பு


Stanley Rajan's photo.


அழகான கழுத்திற்கு வைர நெக்லஸ் வழங்காமல் காலிற்கு வைர செருப்பு வழங்கியிருக்கின்றார் பார்த்தீர்ககளா?








இதுதான் உசேன் போல்ட்டின் தொழில் பக்தி

காலால் ஓடி சம்பாதித்த காசு, தனக்கு பிடித்தமான நடிகையின் காலினைத்தான் பெருமைபடுத்தவேண்டும் என நினைத்திருக்கின்றார் மனிதர், எப்படிபட்ட சிந்தனை.

அவரை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தோம், மனிதர் வில் அம்பு போஸ் கொடுத்து தன்னை மன்மதன் அம்பாகவே சிம்பாலிக்காக அறிவித்துகொண்டவர் என்று, அதனை அவர் நிரூபித்துகொண்டும் இருக்கின்றார்.

இந்திய நடிகைகள் எனக்கு பிடிக்கும், டேட்டிங் செல்ல தயார் என அறிவித்தவர்தான் உசேன் போல்ட், ஆனாலும் இவ்வளவு வேகமாக இருப்பார் என உலகம் நினைக்கவில்லை, விட்டால் மும்பைக்கு ஓடியே வந்துவிடுவார் என பயந்த கத்ரீனா ஜமைக்கா பறந்தாராம்.

அங்கு ஹூசைனோடு ஊர் சுற்றியவர் சும்மா இருக்கலாம் அல்லவா?, நான் சந்தித்த ஆண்களில் மிக சிறப்பானவர் என உசேனுக்கு சர்டிபிக்கேட் வேறு கொடுத்திருக்கின்றார்,

எங்கு புகை வருகின்றதோ இல்லையோ சல்மான்கான் காதில் நிச்சயம் வரும்

ஆனால் அவரால் கொலைவெறியில் உசேன்போல்டினை விரட்டினாலும் ஓடிபிடிக்கமுடியாது என்பது கேத்ரீனாவிற்கு தெரிந்திருக்கலாம்.

பாலிவுட் வரை உசேன் போல்ட் ஓடி வந்துவிட்டார் வந்துவிட்டார், கோலிவுட் வர எவ்வளவு நேரமாமாகும்?, வரலாம்.

அவர் வேறு மகா வேகமான ஓட்டக்காரர்

ஆனால் 1990கள் என்றால் குஷ்பூவிற்கு நிச்சயம் தங்க செருப்பு, தங்கத்தில் மிதியடி தயார் செய்ய சொல்லியிருக்கலாம், வைரம் பதித்த ஷூ ராக் செய்து கொடுத்திருக்கலாம்

அல்லது திருச்சியில் கட்டபட்ட கோயிலுக்கு நன்கொடை அள்ளி கொடுத்திருக்கலாம்

இனி வாய்ப்பில்லை.

(ஆனாலும் தங்க‌ சரிகை, பட்டு சாக்ஸை எல்லாம் கொடுக்கமாட்டார் என நம்புவோம்)

இது 2016..., யார் முண்ணணி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ம்ம்ம்ம்ம் எனவே நண்பர் Babu Rao அவர்களே, எதனையும் தாங்கும் இதயத்தை இறைவன் உங்களுக்கு அருளட்டும்















No comments:

Post a Comment