Wednesday, September 14, 2016

இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க..

91,308 பேர் அதிமுகவில் இணைப்பு: அதிமுக ஒரு மாபெரும் அரசியல் பயிற்சி களமாக திகழும்: ஜெ. பேச்சு

ஆம் திகழும், உலகின் மிகபெரும் அடிமை கூட்டமாக வேண்டுமானால் திகழும்

இன்று உலகினை மிரட்டும் நோய் ஷிகா வைரஸ் காய்ச்சல்

ஷிகா வைரஸ் தாக்கிய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சியற்று இருக்குமாம்

அந்த ஷிகா வைரஸ் தமிழகத்தில் வெகுகாலமாக இருந்திருக்கின்றது என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிபட்டுவருகின்றது, அதனால்தான் இவ்வளவு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இதில் ஆரியன், கன்னடன், மலையாளி, தெலுங்கன், சிங்களன் சதியும் இருக்கலாம்.

2 தலைமுறையாக தமிழகத்தில் மூளை குறைபாடுள்ளவர்கள் பிறந்திருக்கின்றார்கள்

உடனே உலக சுகாதார மையத்தின் கவனத்திற்கு கொண்டுபோக வேண்டிய தகவல் இது, நாம் என்ன சொல்வது?. அவர்களுக்கே அந்த சந்தேகம் வந்திருக்கும்

ஹிலாரி ஜெயலலிதாவினை கண்டே அரசியலுக்கு வந்தார் என்றபொழுது அவர்கள் அப்படித்தான் யோசித்திருப்பார்கள்

விரைவில் ஐநாவின் சுகாதார பிரிவு குழுக்கள் தமிழகத்தில் குவியலாம். அப்படியாவது வியாதி குணமாகட்டும்

ஆனால் வியாதி அவர்களை பிடித்து, அவர்கள் ஜெனிவா மன்றத்தில் "இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.." என பேசி தொலைத்துவிட கூடாதே..

No comments:

Post a Comment