Tuesday, October 11, 2016

இங்கே... அங்கே..











4 சிறல்கள்




துண்டு துண்டாய் வெட்டபட்ட பணம் கடலூரில் சாலையோரம் கிடந்தது

பணத்திற்காய் மனிதனை துண்டு துண்டாக வெட்டிய காலம் மாறி, யாரையோ காப்பாற்ற பணத்தினை துண்டு துண்டாக வெட்டியிருக்கின்றார்கள்

அவ்வளவிற்கு தேசம் முன்னேறிவிட்டது, கண்டெய்னரை திறந்தால் பணம், ரோட்டு பக்கம் பணம் என காணுமிடமெல்லாம் பணம் கொட்டிகிடக்கின்றது


இன்னும் குளிருக்கு பணத்தை எரிக்கும் நிலை விரைவில் வரலாம்.

வாழ்க தமிழ்நாடு







 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு


தங்களுக்கு அது கிடைக்கவில்லை(!) என்ற ஆதங்கத்தில் தமிழக எழுத்தாளர்கள், இலக்கிய இம்சைகள் இனி நோபல் பரிசின் இலக்கிய தரம் குறித்து கடித்து குதறுவார்கள் பாருங்கள்

அதனை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது


ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும் எப்படிஎல்லாம் பாய போகின்றார்களோ....

அவர்களை விட அவர்களின் அடிப்பொடிகளின் பாய்ச்சல்தான் அகோரமாக இருக்கும்







 உத்தர பிரதேசத்தில் நீதிபதி பதவி வகித்த 30 வயது நிறைந்த 3 மாத கர்ப்பிணி மனைவியை கருக்கலைப்பு செய்ய மறுத்ததற்காக காதல் கணவரே கொலைசெய்தார்


இப்பெண் நீதிபதி, அவருக்கே கர்பக்கொலை செய்ய கணவன் நிர்பந்தித்திருக்கின்றான், அதாவது சட்டத்திற்கு புறம்பான காரியத்தினை செய்ய சொல்லியிருக்கின்றான்.


அவரோ கணவனை பிடித்து சட்டத்திடம் தண்டிக்க கொடுக்காமல் பரிதாபமாக செத்திருக்கின்றார்.





நீதிபதி தொழில்வேறு, வாழ்க்கை வேறு என்றிருந்திருக்கின்றார் அந்த நீதிபதி.









ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலக மாட்டேன்!- டிரம்ப் திட்டவட்டம்!

இதற்கு ஹிலாரியினை அதிபராக்காமல் ஓயமாட்டேன் என இவர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கலாம்.






No comments:

Post a Comment