அவரின் சீடகோடி திலீபன் மகேந்திரனை தமிழச்சி செக்கில் போட்டு ஆட்டிகொண்டிருக்கின்றாள், இனி பேக் ஐடிகள் கூட திலீபனிடம் பேச அஞ்சும், அப்படி கிழித்துகொண்டிருக்கின்றார்
அய்யா சென்று அவர்களை சமாதானபடுத்த கூடாதா? அவரின் சீடனுக்கு வரும் அவமானம் எல்லாம் அவருக்கே அல்லவா?
அதுவும் இனி அண்டார்டிக்காவிற்கு ஓடுமளவிற்கு அல்லவா தமிழச்சி வாரிக்கொண்டிருக்கின்றார், சீடன் இல்லா தியாகு என்ன செய்வார்?
தேசியகொடியினை எரிக்கும்பொழுதெல்லாம் ஊக்கம் கொடுத்தவர், இன்று தமிழச்சி அவனை போட்டு வறுத்தெடுக்கின்றார், இவர் காப்பாற்ற செல்லாவிட்டால் என்ன திராவிட தர்மம்???
ஒருவேளை சீடனே இப்படி என்றால், இவர் களமிறங்கினால் சகலமும் உரிந்து நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாமோ?
மடியில் கனம் இருக்கலாம், அதனால் அங்கு சென்று பேச பயம் இருக்கலாம் :)
அன்றொருநாள் அங்கிள் சைமன் நான் அன்று இருந்திருந்தால் பசும்பொன் தேவருக்கும் இம்மானுவேல் சேகரனுக்குமே பஞ்சாயத்து பேசி தமிழராக இணைத்து கைகுலுக்க வைத்திருப்பேன் சொல்லிகொண்டிருந்தார்
அரைமணிநேரம் ஐ.நாவில் என்னை பேசவிட்டால் ஈழம் வாங்கி தருவேன் என்றெல்லாம் முழங்கியவர் அவர்.
அப்படிபட்ட திறமையானவர் இங்கே தமிழச்சி மற்றும் திலீபன் என இரு தமிழர்கள், அதுவும் போராளிகள் அடித்துகொண்டிருக்கும் போது கொஞ்சம் வந்து பேசி,
"நாம தமிழங்கப்பபா..
அவ யாரு அக்கா தமிழச்சி,
நீ யாரு தம்பி தமிழன்,
நான் யாரு அம்மான் தமிழன்,
நமக்குள்ள எதுக்குப்பா சண்டை"
என பேசி தீர்த்துவைத்தால் எப்படி இருக்கும்?
வரமாட்டார்
ஒருவேளை முத்துராமலிங்கம், இம்மானுவேல் சேகரன் போன்றவர்களிடம்தான் பேசுவாரோ?
No comments:
Post a Comment