1986களில் ஈழ விவகாரம் தொடர்பாக கலைஞரும், ராமசந்திரனும் மோதிகொண்ட நேரம், அதுவரை வள்ளல், ஈழகாவலர் என சீன்போட்டுகொண்டிருந்த ராமச்சந்திரன், ராஜிவ் தலையிட்டதும் ஒதுங்கிகொண்டார்
ஆனால் கலைஞரின் முழக்கம் ஈழவிடுதலை, போராளிகள் ஆதரவு என்றே இருந்தது
ராமச்சந்திரனின் கட்சியினர் அப்பொழுதிருந்தே ஒரு மாதிரியாக பேசுவார்கள், அதுவும் அவர்கள் தலைவனை புகழ்வதென்றால் இப்போதிருப்பவர்கள் எல்லாம் அவரிடம் பிச்சை எடுக்கவேண்டும்
அப்படி சம்பந்தமில்லாமல் சொன்னார்கள், அன்று அந்த ராமசந்திரனுக்கு இலங்கையில் வெற்றி, இன்று நமது ராமசந்திரனுக்கு அதே இலங்கையில் வெற்றி, வெற்றி
(அப்படி என்ன வெற்றி என்பதுதான் தெரியவில்லை)
கலைஞர் அவருக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார், ஆம் அன்று அசோகவனம், இன்று அசோகா ஹோட்டல்
(பிரபாகரன் சர்ச்சைகுரிய வகையில் தங்க வைக்கபட்ட டெல்லி ஹோட்டல்)
அதன் பின் அடிமைகள் பக்கம் இருந்து சத்தமே இல்லை
மிக சுவாரஸ்யமான மனிதர்களில் அவருக்கொரு இடம் நிச்சயம் உண்டு.
No comments:
Post a Comment