இன்று உலக பெண் குழந்தைகள் தினமாம்
அதனை உலக தேவதைகள் தினம் என்றே சொல்லலாம்
பெண்குழந்தைகள் பெரும் வரம், பெரும் ஐஸ்வர்யம்
கடவுள் எனக்கும் அப்படி ஒரு தேவதையினை கொடுத்திருக்கின்றார்,
அவளாலே வாழ்வே வசப்பட்டு நிற்கின்றது, வாழ்விற்கான அர்த்தம் அவளிடமிருந்தே தொடங்கிற்று.
அந்த பிஞ்சு மொழியிலும், குறுகுறுப்பான பாச பார்வையிலும், மனதால் பேசிக்கொள்வதிலும் பெண் குழந்தைகள் உலகின் பெரும் அதிசயமே.
அந்த சின்ன புன்னகையில்தான் கோயில், சொர்க்கம் மற்றும் அதில்வாழும் தெய்வம் எல்லாமே தெரிகின்றது
தெய்வம் என்மடியில் தவழ ஆரம்பித்த பின் எல்லா நாளும் எமக்கு தேவதை தினமே.
No comments:
Post a Comment