Friday, October 28, 2016

நரகாசுரன் சிறப்புப் பதிவு



 Image may contain: 3 people , text


கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள், மடையன், கடவுள் இல்லவே இல்லை என சொல்வார்கள்.


ஆனால் அதே கடவுளால் கொல்லபட்ட நரகாசுரனை நம்புவன் சுயமரியதைக்காரன், திராவிடன், பகுத்தறிவுவாதி, இன உணர்வாளன், அறிவுள்ளவன் எனவும் சொல்கின்றார்கள்


எப்படி இருக்கின்றது திராவிட கொள்கை?





வீரப்பன் நல்லவன், அவனை கொன்ற ஜெயலலிதா அவனை விட நல்லவர் என்ற வித்தியாசமான சிந்தாந்தமும் நம் சிற்றறிவுக்கு எட்டாது.

இப்படி அரிய தத்துவங்களை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கம் இது.

இன்னும் என்னென்ன தத்துவங்களை சொல்லபோகின்றார்களோ??

வருங்காலத்தில் பெரியாரை நடுரோட்டில் விட்டுசென்ற அண்ணாவும் கலைஞரும் பார்பணர்கள் என சொல்லி போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை

பைபிளின் தாவீது கொன்ற கோலியாத்தும், அரேபியாவில் இஸ்லாமிய பெருமக்கள் கல்லெறிந்து விரட்டும் அந்த ஜந்துவும் ஒருவேளை திராவிடர்களாக இருக்கலாம் அல்லவா?

கோலியாத்திற்கு வீரவணக்கம், கல்லில் கட்டி அடிக்கபட்ட அரேபிய திராவிடனுக்கு வீரவணக்கம என்றேல்லாம் இவர்கள் கிளம்புவார்களா என்றால் நிச்சயம் மாட்டார்கள்

பகுத்தறிவினையும் திராவிட்த்தையும் இந்து மதத்தில் மட்டும் கவனமாக தேடுவார்கள்.

இந்த தலாக் சர்ச்சை குறித்து ஏதவாது இவர்கள் உருப்படியாக திராவிட பாணியில் கேட்டிருக்கின்றார்களா?

இல்லை. கேட்க மாட்டார்கள்.

நரகாசுரனை தொடர்ந்து, இனி பிரஹலாதனுக்கு துரோகி பட்டமும், இரண்யனுக்கு வீரவணக்க நிகழ்வும் நடைபெறலாம்

ஒரு மாதிரியான ஆசாமிகள் கூட்டம் இது.

மக்கள் மகிழ்வாக ஒரு பண்டிகையினை கூட கொண்டாட கூடாது, அவர்கள் மகிழ்வாக , குதூகலமாக இருந்துவிட கூடாது என்ற கொள்கையின் பெயர் பகுத்தறிவு
















இனி இந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் நரகாசுரன் சாகாமல் இருக்கட்டும்


அது என்ன சதுர்த்தசியோ, முன் கூட்டிய அம்மாவசையோ பஞ்சாங்கம் போடுபவர்கள் கொஞ்சம் மாத்திக்க கூடாதா?


ஆனனபட்ட வள்ளுவனே "பொய்மையும் வாய்மையிடத்து.." என சொல்லவில்லையா? அது நன்மை பயக்கும் அல்லவா?




அப்படி இப்படி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் எவ்வளவு பேருக்கு "நன்மை பயக்கும் .." தெரியுமா?


இந்த இஸ்லாமிய மன்னர்களும், வெள்ளையனும் படையெடுத்து வந்தது போல, இந்து மன்னர்களும் 4 நாட்டிற்கு படையெடுத்து மதம் வளர்த்திருந்தால்தான் என்ன?


அப்படி செய்திருந்தால் சீனர்கள் கூட இந்துக்களாக ஆகியிருப்பர்கள், விடுமுறை கிடைத்திருக்கும், அந்த மன்னர்களை
நினைக்கும்பொழுதே கோபமாக வருகின்றது.


இந்தியாவிற்குள்ளே சண்டை போட்டிருக்கின்றார்களே தவிர தாண்டி சென்று 4 பேரை மதம் மாற்றியதாக ஒரு வரலாறுமில்லை


அந்த நிலவு கொஞ்சம் மெதுவாக சுற்றி இந்த அம்மாவாசை வேலைநாட்களில் வந்து தொலையக்கூடாதா?


இந்த வங்கி பணியாளர் போல நிலவும் மெதுவும் இயங்கினால்தான் என்ன?


அப்பல்லோ டாக்டர்களை போல இவ்வளவு கடமை உணர்ச்சியா அதற்கு?


இங்கே தமிழர்கள் எல்லாம் கொண்டாட்டம் தொடங்கிவிட்டார்கள்,


சக தமிழன் விடுமுறையில் இருக்கும்போது அலுவலகம் கிளம்புவது எவ்வளவு கொடுமை.


வைகோவிடம் சிக்கியுள்ள திருமாவினை விட மோசமான நிலை என்பதை விட என்ன சொல்ல முடியும்?








No comments:

Post a Comment