சும்மா சொல்ல கூடாது, சலங்கை ஒலியில் " நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்.." என கமல் மிக பிரமாதமாக ஆடுகின்றார்.
பரத முனிவரே வந்து ஆடியது போன்று அப்படி ஒரு நளினம் அப்படி ஒரு அழகு.
சும்மா சொல்ல கூடாது, சலங்கை ஒலியில் நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் என கமல் மிக பிரமாதமாக ஆடுகின்றார்.
பரத முனிவரே வந்து ஆடியது போன்று அப்படி ஒரு நளினம் அப்படி ஒரு அழகு.
மிக மிக ரசித்து பார்க்கவேண்டிய நடனம் அது.
ஆனால் என்ன செய்ய? ஜெயப்பிரதா வந்து முகம் காட்டியபின் கமலின் நடனத்தையா கவனிக்கதோன்றுகின்றது, அந்த மொத்த நடனத்தையும் ஒற்றை புன்னகையில் தோற்கடிக்கின்றார் ஜெயப்பிரதா..
ஜெயப்பிரதா காதில் ஆடும் ஜிமிக்கி கூட மிக அழகாக ஆடுகின்றது.
அப்பாடலுக்கு விருது தவறிவிட்டது என்றார்கள்.
எப்படி கிடைக்கும், ஜெயபிரதாவின் மாயமுகத்தினை பார்த்தபின் கமலஹாசனின் நடனம் எப்படி மதிப்பிடபட்டிருக்கும்?
சூரியன் முன் நிலவு வந்தால் எப்படி ஒளிரமுடியும்?
வேறு ஏதும் நடிகை நடித்திருந்தால் கமலுக்கு அப்பாடலுக்கு சர்வதேச விருதே கிடைத்திருக்கலாம்....
ஆக விருது தவறிய ஒரே காரணம் ஜெயப்பிரதாவின் கண்ணும் அந்த அழகிய சிரிப்புமே.....
No comments:
Post a Comment