ஒரு குழு ராவணனுக்கு விழா நடத்தி ராமனை கண்டித்திருக்கின்றது, அதில் ஒரு நண்பருடன் பேச நேர்ந்தது
நீங்கள் பெரியார் இயக்கமா?
ஆமாம்
நீங்கள் இந்த புராணம் இதிகாசம் எல்லாம் புரட்டு என்பவர்கள் அல்லவா?
ஆம், நிச்சயம் புரட்டு. எல்லாம் திராவிடனை அடிமையாக்க ஆரியன் செய்த ஏமாற்று வேலை, ராமாயணம் நடக்கவே இல்லை
சரி, ராவணன் எப்படி வந்தார்?
அவன் திராவிட தென்னாட்டு மன்னன், தமிழ் மன்னன் அவனை ராமன் வஞ்சகமாக அழித்தான்
அப்படியானால் ராமர் இருந்ததை ஒப்புகொள்கின்றீர்களா? இப்பொழுதுதான் இல்லை என்றீர்கள்
அது ஹிஹிஹிஹிஹி , ராவணன் ஒரு தமிழ்மன்னன், அவன் பக்திமான் அதனை பொறுக்காத ஆரிய பார்பணர்கள் அவனை கொன்றார்கள், கதை பின்னாளில் மாற்றி எழுதியிருக்கலாம், நாங்கள் சரி செய்கின்றோம்
அப்படியானால் ராமர் பாலம் இருந்ததை ஒப்புகொள்கின்றீர்களா? பின்னர் ஏன் அவ்வளவு அழிச்சாட்டியம்
அது ராவணன் கட்டியது, தமிழகத்திற்கு வருவதற்காக கட்டியிருப்பான்
அவனிடம்தான் விமானம் இருந்ததே, பின் ஏன் பாலம்
சரி, ராமன் கட்டி தொலைத்தான் ஆனால் திராவிடரை அழிப்பதற்கு கட்டினான், அதனால் அது அவமான சின்னம் இருக்க கூடாது. இடித்துவிட வேண்டும், இது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது
எப்படியோ ராமாயணம் நடந்ததை ஒப்புகொள்கின்றீர்கள்
ஆம் திராவிடரை அழித்த வரலாறு அது
ஏன் அழித்தான்?
ராவணன் பக்திமான், மிக சிறப்பாக ஆட்சிசெய்தான் அது ஆரியருக்கு பிடிக்கவில்லை
கடவுளே இல்லை என்றுதானே உங்கள் பெரியார் சொன்னார், நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கையுள்ள காட்டுமிராண்டிக்கா வரிந்து கட்டுகின்றீர்கள்?
நீ குழப்புகின்றாய், அபப்டி எல்லாம் அல்ல அவன் தமிழன், திராவிடன். நாங்கள் அநியாயமாக கொல்லபட்ட எல்லா திராவிடனுக்காகவும் போராடுவோம்
அப்படியா?
அப்படித்தான் சூரபத்மன், நரகாசுரன், என புராணம் முதல் வீரப்பன், பிரபாகரன் வரை இன்றளவும் கொண்டாடுவோம்
உனக்கு தெரியாது, எல்லா ஆரியர்களும் வந்து திராவிடர்களை கொல்வார்கள், இந்த வீரப்பனாரை கொன்றது கூட கேரளத்து பார்ப்பான் வம்சம்தான். இலங்கைக்கு உதவி செய்து பிரபாகரனை கொன்றது டெல்லி பார்ப்பானே
சரி இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர் போன்ற திராவிட பெருமக்களை கொன்றது யார்?
அதுவும் ஆரிய சதி.
சரி யார் ஆரியர்கள்?
பிராமணர்கள் அவர்கள்தான் ஆரியர்கள்
ராமன் சத்ரியன் என்றுதானே வரலாறு சொல்கின்றது
இல்லை, உனக்கு தெரியாது வடக்கே இருப்பவர்கள் அனைவரும் ஆரியர்கள், அவர்கள் பிராமணர்களின் வேறுவேடம்
அம்பேத்கர், மாயாவதி,முலாயம்சிங்,கன்சிராம் அங்குதானே இருக்கின்றார்கள் அவர்களுமா?
ஓ அப்படியா?, சரி அங்கே திராவிடர்களும் இருக்கலாம், நாங்கள் அவர்களை ஆதரிப்போம்
அப்படியானால் யார் திராவிடர்கள்?
பார்பானை தவிர எல்லோரும் திராவிடர்கள்
ராமன் சத்திரியன் தானே..(கேட்டால் முதலிருந்து வரும் வேண்டாம் விட்டுவிடலாம்). ஆக வடக்கே யார் பிராமணருக்கு எதிராக போராடினாலும் நீங்கள் ஆதரிப்பீர்கள்
ஆம் நிச்சயமாக திராவிட ஒடுக்கபட்ட இனமாக இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம்
அது பெண்ணாக இருந்தால்
கொண்டாடி தீர்ப்போம்
அப்படியானால் பூலன் தேவியினை ஏன் மறந்துவிட்டீர்கள்
ஆம் பார்த்தீரா? இனி வீரப்பன், பிரபாகரன் வரிசையில் புரட்சி தலைவி பூலன் தேவி படமும் வைத்து கொண்டாடுவோம்
என்னது புரட்சி தலைவியா?
ஓஓஓ..முடியாது அல்லவா?
சரி இனி அவரையும் சேர்த்துகொள்ளுங்கள்
கண்டிப்பாக
சரி இந்த ராவணனை கொண்டாடிவிட்டு இந்த சூர்ப்பநகை, திரிசடை எல்லாம் விட்டுவிட்டால் எப்படி?
நன்றி நண்பரே, அடுத்த வருடத்திலிருந்து ராவணன், மண்டோதரி, சூர்ப்பநகை, திரிசடை என எல்லோருக்கும் பேனர் வைத்து அசத்திவிடுவோம்
தீபாவளி வருகின்றதே அதற்கு என்ன திட்டம்?
நரகாசுரன் படம் போட்டு களபேரம் செய்துவிடுவோம்
ஆக பகவானையும் நம்புகின்றீர்கள்
பின்னே அந்த ஆரியன் தான் திராவிட நரகாசுரனை அழித்த பாவி
கடவுள் இல்லை என்றுதானே பெரியார் சொன்னார், நீங்கள் கடவுளை ஒப்புகொண்டால் பெரியாரிஸ்ட் இல்லையே
நண்பரே கடவுள் இல்லை, இல்லவே இல்லை. ஆரியர்கள் உருவாக்கிய புரட்டுதான் கடவுள், ஆனால் அப்படி அந்த கற்பனை கதாபாத்திரதினால் கொல்லபட்டவன் எல்லாம் திராவிடர்கள், அது ராவணன் நரகாசுரன். கடவுள் பொய் ஆனால் அவரால் கொல்லபட்டவர்கள் நிஜம் புரிகின்றதா?
நன்றாக புரிகின்றது, இதுதான் பெரியாரிசம்.
ஆம் இதுதான் நாங்கள் கண்ட பெரியாரிசம், அதனை பின்பற்றும் நாங்கள் பெரியாரிஸ்டுகள்
சரி இன்னும் சிறப்பாக செயல்படுங்கள்
நிச்சயமாக
பூலன் தேவியினை மறந்துவிடாதீர்கள்
கண்டிப்பாக அடுத்த பேனரில் பிரபாகரன், வீரப்பன் அடுத்து அவர் படமும் இருக்கும்
பூலன் தேவி வாழ்க
ஆம் புரட்சி தலைவி பூலன் தேவி வாழ்க
யோவ் இப்படியே சொல்ல போகின்றீரா?
முடியாது பின் எப்படி சொல்ல?
வேறு ஏதாவது சொல்லும்
சமூக நீதி காத்த வீராங்கனை..
அதனை உங்கள் வீரமணி அவாளுக்கே கொடுத்துவிட்டான்
திராவிட போர்வாள்?
வைகோ விடமாட்டார்
சரி நாங்கள் ஒரு பட்டம் கண்டுபிடித்து திராவிட அடையாளத்துடன் சிறப்பித்துகொள்கின்றோம்
நல்லது ராவணன், ராமனோடு நிறுத்திகொண்டீர்களா அலல்து இன்னும் ஆராய்சி தொடர்கின்றதா?
ஆம் பரசுராமனின் தாய் ஒரு திராவிடச்சி, உண்மை தெரிந்ததும் அவன் வெட்டிகொன்றான், மாவீரன் பிரஹலாதனை ஏதோ ஒரு விலங்கின் மூலம் கொன்றிருக்கின்றார்கள் ஆரியர்கள் அப்படி பல முடிவு கண்டிருக்கின்றோம்
அட அந்த மச்சவாதாரம், கூர்மவதாரம்?
மச்சவாதாரம், கூர்மாவதாரம் எல்லாம் மிக எளிது, மீனுக்கு யார் எதிரி? கூர்மம் எனும் ஆமை, வராகம் எனும் பன்றிக்கு யார் எதிரி என்று பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம், அவற்றின் எதிரிகள் எல்லாம் திராவிட முன்னோர்கள்
அப்படியானால் மீணவனும், பன்றி வளர்ப்பவனும் ஆரிய சதியில் விழுந்தவனா? அல்லது அவன் பார்ப்பானா?
இதுபற்றி தீவிரமாக நடக்கும் ஆராய்சி முடிந்தபின் உங்களுக்கு அறிவிக்கபடும்.
(இப்படித்தான் கடுமையான, உலகிற்கு மிக அவசியமான ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றார்கள் , அவ்வப்போது அறிவிப்பார்கள்)
No comments:
Post a Comment