Thursday, October 20, 2016

முதல்வர் மீது எவ்வளவு அன்பு?




முதல்வர் நலம் மீது கட்சிக்காரர்கள் அக்கறை கொண்டு அப்பல்லோவில் காத்திருப்பதும், அமைச்சர்கள் முடிந்தால் வானம் வரை சென்று கடவுள் கையினை பிடித்து வரும் அளவிற்கு வழிபாடு செய்வதும் ஆச்சரியமல்ல‌


எதிர்கட்சிகள் சென்று நலம் விசாரிப்பது அரசியல் நாகரீகம் என்ற வகையில் வரும், பிரதமர் அலுவலகம் தலையிடுவது நிர்வாகம் என்ற வகையில் வந்தே தீரும்.


இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்.





ஆனால் முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானியும், அதானி மகனும் அலறி அடித்து வந்து அப்பல்லோ வாசலில் நிற்பதுதான் மகா ஆச்சரியம்.

அப்படி என்ன அவர்களுக்கு முதல்வர்மீது அவ்வளவு அன்பு?

அன்பெல்லாம் இருக்கமுடியாது, ஆனால் தமிழகத்தில் அவர்கள் முதலீடு எங்கெல்லாமோ இருக்கலாம், இன்னும் வரும் திட்டத்திலும் இருக்கலாம்

அம்பானி, அதானி குடும்பம் வந்து விசாரித்தாகிவிட்டது, அடுத்தது சிவநாடாராக இருக்கலாம்

யார் யாரோ வருகின்றார்கள், இன்னும் வருவார்கள்

ஆனால் கடந்தவருடம் கரகாட்டம், ஒயிலாட்டாம் கொடுத்து வரவேற்ற அந்த தொழிலதிபர்கள், அதாவது கிட்டதட்ட 2 லட்சம் கோடி முதலீடு செய்த அந்த தொழிலபதிபர்களை காணவில்லை

ஒருவேளை முதல்வரே சிக்கலில் இருக்கும்போழுது, 2 லட்சம் கோடி எப்படியும் போகட்டும் என கடந்துவிட்டு அழுதுகொண்டிருப்பார்களோ?

அந்த முதலீடுகளை என்ன ஆனது?, தெரியாது

ஆக கடந்த வருடமே பெரும் வதந்தி மேள தாளம் முழங்க, கரகாட்டம் ஒயிலாட்டம் நடக்க, பரப்பபட்டிருக்கிறதா? என்பதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.

ஆனாலும் உலக வரலாற்றிலே, பெரும் கொண்டாட்டத்தோடு , பெரும் நடனங்களோடு ......,






No comments:

Post a Comment