Thursday, October 20, 2016

அப்பல்லோ முன்பு அங்கபிரதட்சணம் ...

அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் அங்கபிரதட்சணம்


பொதுவாக தெய்வம் வாழும் ஆலயத்தினை சுற்றித்தான் இம்மாதிரி எல்லாம் உருளுவார்கள், வரலாற்றிலே முதன்முறையாக ஒரு மருத்துவமனையினை , அதுவும் ரத்தமும் மருந்தும் புரளும் இடம் என சொல்லபடும் மருத்துவமனையினை சுற்றி உருண்டிருக்கின்றார்கள்.


அவர்களுக்கென்ன அவர்கள் தெய்வம் உறையுமிடம் அவர்களுக்கு கோயில் அவ்வளவுதான்,




இது பகுக்காத அறிவு, மூட நம்பிக்கை, பக்தி எல்லாவற்றையும் தாண்டி சென்றுவிட்ட நிலை, தெய்வத்திடம் கோரிக்கை வைப்பது வேறு விஷயம், இவர்கள் செய்வது இன்னொரு கோணம்.


அதாவது பாதிக்கபட்ட நோயாளிடமே "மகமாயி எப்படியாவது பிழைத்துவிடு அம்மா.." என கதறும் விசித்திர கலாச்சாரம்,


இதுவரை கண்டதுமில்லை இனி காணபோவதுமில்லை


இனி அப்பல்லோ நிர்வாகம் மொட்டை அடித்தல், தீ மிதித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கிகொடுத்தல் நல்லது


இருந்து பாருங்கள், விரைவில் இவர்கள் விரைவில் எல்.ஆர் ஈஸ்வரியினை அழைத்து வந்து அப்பல்லோ வாசலில் "செல்லாதா செல்ல மாரியாத்த்தா.." என பாட விட்டுவிடுவார்கள்.



No comments:

Post a Comment