Friday, October 28, 2016

தமிழக அரசு சார்பில் தீபாவளி வாழ்த்து எப்படி வருகின்றது என பார்க்கலாம்?



தீபாவளிக்காவது முதல்வர் இலாக்காவினை கவனிக்கும் பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவிப்பாரா? என தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்த்திருக்கின்றது.


அம்மா சார்பாக வாழ்த்தா? அரசு சார்பாக வாழ்த்தா? கட்சி சார்பாக வாழ்த்தா? என எப்படி வாழ்த்துவது என தெரியாமல் பொதுவாக தீபாவளி வாழ்க என அவர் வாய்ப்பிருக்கின்றது


இப்பக்கம் உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் மாநில அரசு பணிந்துவிட்டது என பல சலசலப்புகள்.


தமிழகம் என்னவோ இன்னொரு நாடு போலவும், இங்கு மத்திய அரசுக்கே உரிமை இல்லை என்பதுபோலவும், தமிழக அரசு தோற்ற்றுவிட்டதாகவும் பல சர்ச்சைகள்


உணவு பாதுகாப்பு சட்டமென்பது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு உண்டு என பாதுகாக்கும் சட்டம், இதனை அமல்‍படுத்தினால் மாநில அரசுக்கு செலவு கூடுமாம்


சரி மாநில அரசு சேர்த்தபணத்தினை என்ன செய்கிறது? தெரியாது, ஆனால் திடீரென்று அவர் வீட்டில் அத்தனை கோடி, கண்டெய்னரில் இத்தனை கோடி என செய்திகள் வரும்


அதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது, அபச்சாரம் அவதூறு என்பார்கள்


இந்திய அரசின் சட்டம் எல்லா மாநிலத்து மக்களையும் காக்கும் போது தமிழகத்தை மட்டும் காக்காதாம், இவர்கள் அரசியல் இப்படி இருக்கின்றது தமிழக கட்சிகளின் அரசியல் நிலை


அப்படி தமிழக அரசு மத்திய அரசிடம் பணிந்துவிட்டது என சீண்டல்கள்


பின்னே பணியாமல் என்ன செய்யும்?


முதல்வர் இலாக்காவினை பார்ப்பவருக்கு பணிவினை தவிர என்ன தெரியும்?


பணியத்தான் செய்வார்? அது அவரின் தொழில், பணி என எல்லாமும் அந்த பணிவுதான்.


தமிழக அரசு சார்பில் தீபாவளி வாழ்த்து எப்படி வருகின்றது என பார்க்கலாம்?


ஒருவேளை புறக்கணிக்க சொல்லிவிட்டால்...................






No comments:

Post a Comment