Friday, October 28, 2016

சரவெடிச் செய்திகள்.....



கலைஞரை கவனித்துகொள்ளும் நித்யா யார்? பத்திரிகைகளில் பரபரப்பு செய்திகள்


அங்கே தோட்டகாவல் பூங்குன்றன் என்பார்கள், மருத்துவர் விவேக் என்பார்கள், சிவகுமார் என்பார்கள், திடீரென ராவணன் என்பார்கள், இன்னும் ஏராளமான மன்னார்குடி பாத்திரங்கள் வரும் போகும்


அவர்கள் யார் என்பதை பற்றி எல்லாம் மூச் இருக்காது


ஆனால் கலைஞருக்கு ஒரு உதவியாளன் கிடைத்துவிட்டானென்றால் உடனே அவன் யார்? அவன் வம்சம் என்ன? 5 வயதில் என்ன சாப்பிட்டான்? 10 வயதில் என்ன ஆடை அணிந்தான், அவன் ஜாதகம் என்ன? என கிளம்பிவிடுவார்கள்


கலைஞரின் ஜாதகம் இப்படி, இருக்கட்டும்


ஆனந்த விகடன் பேட்டியினை அடுத்து, அதாவது ஸ்டாலின் வாரிசு என அறிவித்த உடனே கலைஞருக்கு கொப்பளம் வருகின்றது, அவ்வளவு பேர் இருந்தும் நித்யா மட்டும் கவனிக்கின்றாராம்.


உடனே அழகிரி பறந்து வந்து பார்த்து, நலம் பெறுங்கள் என சொல்லியிருக்கின்றார் (முதலில் நலம்பெறுங்கள், அப்புறம் இருக்கிறது என சிலர் எடுத்துகொள்வார்கள்), அழகிரி பார்த்துவிட்டார் அல்லவா?


ஏற்கனவே ராசாத்தி கோபாலபுரம் வந்துவிட்டாராம் (அக்னி நட்சத்திர ஜெய சித்ரா, சுமித்ரா எல்லாம் கண்ணுக்குள் வருகின்றார்கள்)


கலாநிதி, தயாநிதி எல்லோரும் வருவார்கள், குடும்பம் ஒன்றாகும், அதன் பின் கலைஞர் ரேஸ் குதிரை போல முரசொலியில் துள்ளி வருவார்.


கடன் பேட்டியில் ஏற்பட்ட சலசலப்பு இனி அடங்கும்


முன்பே கொப்பளம் வந்து, அதனால் அறிக்கை விட்டு சிறிய சலசலப்பினை ஏற்படுத்திவிட்டு உடல் சுகவீனம், ஓய்வு என கலைஞர் அந்த கொப்பளத்தினை வைத்தும் அரசியல் செய்திருப்பாரோ என யாரும் சிந்திக்க கூடாது


ஆனால் சொல்லமுடியாது .


எது கிடைத்தாலும் அதனை வைத்து ஒரு லாபம் பார்த்துவிடுவது அவர் ஸ்டைல் அது கொள்கையோ கொப்பளமோ எதுவாக இருந்தாலும் சரி.







போனையே எடுக்காத அழகிரி இப்போதாவது நேரில் வந்து சந்தித்தாரே…… கருணாநிதி நெகிழ்ச்சி!

நெகிழ்ந்துவிட்டார் அல்லவா, இனி இந்த கொப்பளம், ஒவ்வாமை எல்லாம் இனி மருத்துவமனை செல்லாமல் சரியாகிவிடும்

ஆனால் மறுபடியும் இந்த நோய்கள் வராமல் கலைஞரை காக்கும் பொறுப்பு அழகிரி போனுக்கே இருக்கின்றது....


அழகிரி போனுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது









பைரவா படத்தின் டீசரை வெளியிட்டிருக்கின்றார்கள், விஜய் திருந்தும் வாய்ப்பு இனி கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை






காவிரி நீரை பெற சித்தராமையாவை திருநாவுக்கரசர் சந்திக்க வேண்டும் : தமிழிசை


அவர் சந்திப்பது இருக்கட்டும்,, பிரதமர் இவர்கட்சிக்காரர் அல்லவா? அவரை இவர் சந்தித்து காவேரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கோரிக்கை வைத்தால் என்ன?


அப்படியே எடியூரப்பாவினை சந்தித்து இடையூறு செய்யாதப்பா என சொல்லிவிட்டு வரலாம் அல்லவா?




ஒருவேளை எடியூரப்பா,மோடி பாஜக கட்சி என்பது இவருக்கு மறந்திருக்குமோ???


இவர்கள் மீதே இப்படி எல்லாம் வீக் பாயிண்ட் இருக்க, இவர் திருநாவுக்கரசை சீண்டி ரொம்ப விவரமாக இருப்பதாக காட்டிகொள்கின்றாராம்.


எவ்வளவு விவரமான ஆளு நம்ம அம்மணி.







 

No comments:

Post a Comment