Monday, October 24, 2016

இந்திய அரசும், ஐ.நாவும் நீதிவழங்கவேண்டும் : சீமான் சீற்றம்

யாழ்பாணத்தில் இலங்கை காவல்துறையினரால் கொல்லபட்ட தமிழ் மாணவர்களுக்கு இந்திய அரசும், ஐ.நாவும் நீதிவழங்கவேண்டும் : சீமான் சீற்றம்


சமீபத்திய யாழ்பாணம் செய்திகள் படித்தவர்களுக்கு சில விஷயம் புரியும், அதாவது சட்டம் ஒழுங்கு அறவே இல்லை, வாள் வெட்டு, கஞ்சா போதை, கோஷ்டி மோதல் என அது சீர்கெட்டு கிடக்கின்றது.


ஒரு காலத்தில் படிப்பிற்கோர் யாழ்பாணம் என்றிருந்த நிலைமாறி ஒரு விபரீத நிலைக்கு கொலை,கொள்ளை என அது வாழமுடியா நகரமாகிகொண்டிருக்கின்றது




சிங்கள அரசும் தயங்கி தயங்கி நடவடிக்கை எடுக்கின்றது, அதிரடியாக எடுத்தால் தமிழின அடக்குமுறை பாரீர் என பொங்கிவிடுவார்கள் எனும் ஒரு அச்சம்.


வெளிநாட்டு பணங்கள் வெள்ளமென பாய்வதும் இதற்கொரு காரணம், அதாவது போதைபொருள் பாவனை, கட்ட பஞ்சாயத்து போன்றவைகளுக்கு.


இம்மாணவர்கள் 50 பேர் நள்ளிரவில் பயணித்திருக்கின்றார்கள், சோதனைக்காக காவல்துறை தடுத்திருக்கின்றது, இவர்கள் நிற்காமல் சென்றதில் சிக்கல் தொடங்கியதில் சிக்கல் தொடங்கிற்று


ஏதும் பெரும் குற்றவாளிகள் என நினைத்துவிரட்டிய காவல்துறை ஒரு கட்டத்தில் சுட்டிருக்கின்றது, இருவர் பலியாகி 3 பேர் தப்பி இருக்கின்றார்கள்


சோதனையில் நிற்காமல் சென்றது ஏன் என்பதுதான் மர்மம், அதுவும் நள்ளிரவு


விஷயம் பெரிதாக சம்பந்தபட்ட காவலர்களை பணி நீக்கம் செய்து, கொலைவழக்கும் பதிவுசெய்துவிட்டார்கள், அதாவது நமது நாட்டில் நடப்பதை விட வேகமாகத்தான் செய்திருக்கின்றார்கள்


இதில்தான் சீமானும் வைகோவும் பொங்கி கொண்டிருக்கின்றார்கள்,


சூழ்நிலையினையும் , நடந்த கதையினையும், அங்கு எடுக்கபட்ட நடவடிக்கைகளையும் சொல்லமாட்டார்கள், மறைத்துவிடுவார்கள்


ஆனால் கடுமையாக கொந்தளித்து பேசிக்கொண்டிருப்பார்கள்


நள்ளிரவில் ஏன் சென்றார்கள், காவல்துறை செக்போஸ்டில் ஏன் நிற்கவில்லை என இவர்களிடம் கேட்டால் நாமும் தமிழின துரோகிகள்.


தமிழ்நாட்டில் எத்தனையோ தமிழர்கள் என்கவுண்டரில் கொல்லபட்டதுண்டு, அது ராமநாதபுரம் பகுதிகளில் நடந்து துப்பாக்கி சூடு, வெங்கடேச பண்ணையார் மீதான துப்பாக்கி சூடு என ஏராளம் உண்டு.


வெங்கடேசன் மீதான படுகொலைக்கு அமைக்கபட்ட விசாரணை கமிஷன் முடிவு கூட இன்னும் தெரியாது


அதுபோல சில லாக் அப் மரணமும், சர்ச்சைகுரிய துப்பாக்கி சூடுகளும் தமிழகத்தில் நடப்பதுண்டு. வாச்சாத்தி சம்பவம் போல சில பாலியல் சர்ச்சைகள் காவல்துறை மீதும் உண்டு.


சரி இவர் அந்த சிவகாசி ஜெயலட்சுமிக்காகவாது காவல்துறையினை கண்டித்த்து தலைகீழாக நின்றதுண்டா???


ராம்குமார் சிறையில் தற்கொலை செய்ததற்கு கூட பெரும் சர்ச்சைகள் உண்டு


அதில் தலையிட இந்த இந்திய அரசினையும், ஐ.நா பெருமன்றத்தையும் சீமான் கேட்கமாட்டாராம், யாழ்பாணத்தில் நடந்தால் உடனே இந்தியா தலையிட்டு தீரவேண்டும் என்பாராம்


இவர் அடிக்கடி சொல்வது போல நல்ல ................. பிறந்திருந்திருந்தால், தமிழக காவல்துறை மீதான சர்ச்சை பக்கங்களுக்கு ஐ.நாவிடமோ மத்திய அரசிடமோ அட குறைந்தபட்சம் மாநில முதல்வரிடமோ சொல்லட்டும் பார்க்கலாம்.



No comments:

Post a Comment