Wednesday, October 19, 2016

சிறு சிறு செய்திகள்




 6 பதிவுகள்






இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான்


திராவிட கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும், சாதிய கட்சிகளோடும், தெலுங்கர் இருக்கும் கட்சிகளோடும், கூட்டணி இல்லை என இவர்கள் தீர்மானம் போட்டாயிற்று


யாரும் இவரை கூட்டணிக்கு அழைத்ததாகவும் தெரியவில்லை





ஆனால் வாலண்டியராக தனித்துபோட்டி என ஏன் கத்துகின்றார் எனவும் தெரியவில்லை, வெயில் அதிகமாக இருக்கலாமோ?

இனி நீர் தனித்து நின்றே ஆகவேண்டும் அய்யா...







டெல்லியில் திருநாவுக்கரசர் - இளங்கோவன்: மேலிடத்தில் தனித்தனியாக ஆலோசனை


# அடுத்த தலைவர் யார் என அறிக்கபடும் நேரம் வந்துவிட்டது, இனி திருநாவுக்கரசரின் பிளான், தாய் வீட்டுக்கே செல்வதாக இருக்கலாம்


பிண்ணணியில் "பல்லாக்கு வாங்கபோனேன் ஊர்வலம் போக, நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" என பாடல் முழங்க அக்கட்சியில் இணைத்தும் கொள்வார்கள்.





சரி அப்பொழுது அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?

நமது குஷ்பூதான்.





அந்த கிறிஸ்துதாஸ் என்ன சொல்லி தொலைத்தார்? ராமரை இவர் அடிக்கவேண்டிய அவசியம் என்ன வந்ததாம்?


அப்படி என்ன ராமருக்கும் இவருக்கும் பிரச்சினை?


வீடியோ லிங்க் இருந்தால் அனுப்புங்கள்,





ஒரு கன்னத்தால் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்றவர் இயேசு,

இவர் ராமனை அடிப்பேன் என்கின்றார்,
அடிப்படை கூட புரியாமல் கிறிஸ்தவனாகிவிட்டாரா?

பைபிளை கையில் பிடித்தவுடன் தாங்கள் கிறிஸ்துவனாகிவிட்டதாக சொல்வர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கமுடியா கொடுமையாக அதிகரித்துகொண்டே செல்கின்றது,









மனநல மருத்துவர் ஷாலினி, மனநல ஆலோசகர் அபிலாஷா குறித்து சொன்ன சர்ச்சை குறித்து, மனநல மருத்துவர் ருத்ரன் கருத்து


ஆக மூன்று மனநல மருத்துவர்களுக்கும் தீர்வு சொல்ல இன்னொரு மனநல மருத்துவர் வேண்டி இருக்கின்றது,


இதற்கு மேலும் இவைகளை படிக்க ஆரம்பித்தால்....





சந்தேகமே இல்லாமல் நமக்கொரு மனநல மருத்துவர் தேவைபடுவார், ஒரே குழப்பமாக இருக்கின்றது.





சீமான் எங்கோ புகைவண்டியினை மறித்து "புரட்சி" செய்துவிட்டாராம் அங்கிளின் மங்கிகளுக்கு கடும் சந்தோஷம்.


இப்படியே மத்திய அரசு தமிழர் விரோதம் செய்தால் தமிழ்நாடு தனியாகுமாம், பின்னர் இவர்கள் ஈழம் அமைத்து அதனை தமிழகத்தோடு சேர்த்து அகண்ட தமிழ்நாடு அமைப்பார்களாம்


அவ்வளவு ஏன் அங்கிள் குரூப்ஸ்?




இந்த புதுச்சேரி பக்கம் சென்று, அதனை யூனியன் பிரதேசத்திலிருந்து நீக்கி தமிழகத்தோடு இணைத்துவிடுங்கள் பார்க்கலாம்.


அவர்கள் தமிழர்கள்தான், ஈழம் தொப்புள்கொடி என்றால் இது தோல் போல் ஒட்டிய உறவு


ஆக அங்கிள் பாய்ஸ், முதலில் புதுச்சேரியினை தமிழகத்தோடு இணையுங்கள், அதன் பின் ஈழ இணைப்பு பற்றி பேசலாம்.


புதுச்சேரியில் போய் இதனை சொல்லிபாருங்கள். அதன் பின்பு புரியும்.


(இப்பொழுது ஒருவன் வந்து கத்துவான் பாருங்கள், டேய் ஏற்கனவே பாண்டிச்சேரி தமிழகத்தில்தானே இருக்கின்றது ....)










ஒப்பந்தம் செய்யாத படங்களில் நடிக்க வற்புறுத்தல், சட்டப்படி சந்திப்பேன்: சிவகார்த்திகேயன் கடிதம்


அப்படி என்ன வற்புறுத்தல்? யார் விளக்கம் கொடுப்பார்


பாண்டேவினை தவிர யார் இப்பிரச்சினையினை உலகிற்கு அறிவிக்கபோகின்றார்கள்?,




விரைவில் அடுத்த பேட்டி நடக்கலாம்













No comments:

Post a Comment