Saturday, October 8, 2016

ஆளுநரை சந்தித்து வைகோ ஆலோசனை

லண்டன் மருத்துவர் ரிச்சர்டை சந்தித்தேன் வைகோ பேட்டி, ஆளுநரை சந்தித்து வைகோ ஆலோசனை


துயரம் நிறைந்த வீடுகளில் அழையா விருந்தாளிகள் வந்தாலும் சந்தித்துகொள்வது ஒரு வகை மரபு, அப்பொழுது எந்த பையித்திரகாரன் வந்தாலும் யாரும் விரட்டுவதில்லை, அவைகள் ஒரு ஒரமாக உட்கார்ந்து எதனையாவது சொல்லிகொண்டே இருக்கும்


பிரபாகரனை சந்திந்தேன் அப்பொழுது அவர் துப்பாக்கி சுட சொல்லிகொடுத்தார் என்றது போல லண்டன் ரிச்சர்டை சந்தித்தபொழுது அவர் எனக்கு மருத்துவம் சொல்லிகொடுத்தார் என அன்னார் ஸ்டெதெஸ்கோப்பினை தூக்கிகொண்டு அப்பல்லோவில் நுழையாதவரை ஆபத்தில்லை.




கிட்டதட்ட 90 எம் எல் ஏக்களை கொண்ட கலைஞரே ஆளுநரை சந்திக்கவில்லை, ஆனால் 4 கவுன்சிலர்களோ 2 வார்டு மெம்பர்களோ கூட இல்லாத இவர் ஆளுநரை சந்தித்து என்னாக போகின்றது?


துயரம் நிறைந்த இறுக்கமான நேரத்தில் சிலரின் நடவடிக்கைகள் சிரிப்பினை கொடுத்தால் அந்த இறுக்கம் குறையும் என்பார்கள், இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது


இல்லை என்றால் ஆளுநரை இவர் சந்திக்க என்ன அவசியம் வந்தது?


ஒருவேளை வைகோ எங்கள் கட்சியின் இன்னொரு பிரிவு என ஏதும் அம்மா கையெழுத்திட்ட கடிதம் ஏதும் கையில் வைத்திருப்பாரோ.??


அதனை கொண்டு அடுத்த ஆட்சியில் தனக்கும் பங்கு வேண்டும் என சமுத்திரகனி ஏதோ ஒரு சினிமாவில் கேட்டது போல கேட்டுகொண்டிருப்பாரோ??



No comments:

Post a Comment