Friday, October 14, 2016

அள்ளிதந்த பூமி அன்னை அல்லவா..




ஊரில் மழைபெய்ய தொடங்கி இருக்கின்றதாம்


அந்த பனங்காட்டு வயல்களையும், அந்த மழையினையும் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த பாடலே நினைவுக்கு வரும்


"அள்ளிதந்த பூமி அன்னை அல்லவா..
சொல்லி தந்த வானம் தந்தை அல்லவா.."





பாடலின் தொடக்க ஹம்மிங்கிலே உருகவைத்துவிடுவார்கள் இளையராஜாவும், மலேசியா வாசுதேவனும்

மனதினை அப்படியே பெயர்தெடுத்து பனங்காட்டு வயல்களுக்கு கொண்டு செல்லும் சக்திமிக்க பாடல் அது.

பாடலை கேட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வது நெடுநேரத்திற்கு சாத்தியமில்லை.

மலேசியாவில் தினமும் மழைபெய்தாலும், ஊரில் பெய்யும் ஒரு மழைக்குரிய சந்தோஷத்தினை அது கொடுப்பதே இல்லை.

அந்த பனங்காட்டு வயல்களும், அந்த மழையுமே அங்கு தாயும் தந்தையுமாயிருந்தது

குழந்தை தன் தந்தையினை கண்ட மகிழ்ச்சியினை போல, அங்கு அந்த‌ மழையினை தவிர ஏதும் மகிழ்ச்சி கொடுத்துவிடமுடியாது.






No comments:

Post a Comment